Monday, June 30, 2008

வியக்க வைக்கும் அறிவியல் விஷயங்கள்




நண்பர்களே,

இந்த உலகில் நம்மை அறியாமல் எத்தனையோ கோடிக்கணக்கான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒரு சிறு துளியாக நான் படித்து வியந்த விஷயங்கள் உங்கள் பார்வைக்கு.
  1. பூமியில் இருந்து நம் கண்ணுக்கு தெரிகின்ற நட்சத்திரங்களில் அதிக தொலைவான நட்சத்திரம் அன்றோமேடா பால் வீதியில் அமைந்துள்ளது. அதன் தூரம் சுமார் 15 லட்சம் ஒளி ஆண்டுகள்
  2. உலக மக்கள் இரண்டாவது அதிகமாக உபயோகப்படுத்தும் உலோகம் தாமிரம்
  3. நமது கழுத்திலிருக்கும் அயோட் (Hyod) என்ற எழுப்பு துண்டு நமது உடலின் உள்ள மாற்ற எந்த எலும்பு பகுதியோடும் இணைப்பு இல்லாமல் அமைந்துள்ளது.
  4. ஒரு துண்டு காகிதத்தை அதிகபட்சம் ஏழு முறை பாதியாக மடிக்கலாம் .
  5. யானைகள் நின்று கொண்டே இறந்தால், அதன் உயிர் பிரிந்த பின்பும் அவை நின்று கொண்டே இருக்கும்
  6. மிளகாய்க்கு எந்த வகை சுவையும் கிடையாது. அவற்றை சாப்பிடும் பொழுது ஏற்படும் நரம்பு எரிச்சலே அதன் சுவை
  7. உலகில் ஆண்கள் இனத்தில் கடல் குதிரை மட்டுமே முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும்
  8. ப்ளூ வேல் (Blue Whale) எனப்படும் ஒரு வகை கடல் மீனின் நாக்கு ஒரு யானையின் அளவுடையதாகும்.
  9. யானையின் துதிக்கையில் ஒரு எலும்பு துண்டு கூட கிடையாது, ஆனால் அதன் துதிககை 4000 தசைகளால் ஆனது.
  10. ஒட்டகத்திற்கு கண்ணில் மூன்று இமைகள் இருக்குமாம்.
தொடரும்...

No comments:

Post a Comment