Monday, August 30, 2010

SETC vs KSRTC

சமீபத்தில் தினமலர் நாளிதழில் தமிழ்நாட்டின் விரைவு போக்குவரத்துகழக பேருந்துகளின் மோசமான நிலையினைப்பற்றி ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது. அது 100% முற்றிலும் உண்மை. பேருந்துகளை வாங்கி விட்டால் மட்டும் போதாது, அதை நன்கு பராமரிக்கவும் வேண்டும். அதில் முற்றிலும் செய்வதில்லை விரைவு போக்குவரத்து ஊழியர்கள். சிலர் நாம் கொடுக்கும் குறைந்த கட்டணத்தால்தான் பேருந்தை சரியாக பராமரிப்பதில்லை என்று சொல்ல நேரிடும். ஆனால் அது முற்றிலும் தவறான சப்பைக்கட்டு என்பது கர்நாடகா மாநில அரசு போக்குவரத்தான KSRTC-யை உபயோகப்படுத்தினால் கண்கூடாகத் தெரிய வரும்.

images

கடந்த நான்கு மாதங்களில் சொந்த ஊருக்குச் செல்ல இந்த பேருந்தைத்தான் உபயோகப்படுத்துகிறேன். பெங்களூரில் இருந்து மதுரைக்கு செல்ல ரூபாய் 310 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் நம் தமிழ்நாட்டின் விரைவு பேருந்தை விட சற்று அதிகம் தான். ஆனால் இதில் அவர்கள் அளிக்கும் வசதிகளில் சில,

* மிக முக்கியமானதாக எல்லோரும் நினைக்கும் நேரம் தவறாமை.
* வயிற்றைப் பதம் பார்க்காத, அதிகப்படியான விலையில்லாத நல்ல உணவகங்களில் நிறுத்துவது.
* அமர்ந்து செல்லும் இருக்கைகள் நல்ல விதமாய் பராமரிப்பது.
* பேருந்து உள்ளே நன்றாக பராமரித்து வைப்பது (தனியார் பேருந்துகளுக்கு சற்றும் சளைக்காத வகையில்).
* கணினி வழியில் டிக்கெட் எடுக்கும் வசதி (www.ksrtc.in)
* பெங்களூர்-ல் உள்ள அனைத்து ஏரியாவிலும் ஏஜெண்டுகள் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி
* எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது, பயணம் செய்யும் எல்லாருக்கும் விபத்துக் காப்பீடு வைத்திருப்பது. இது கட்டணத்தில் அடங்கும்.

இங்கே குறிப்பிட்டவற்றில் ஒன்று கூட தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகத்தின் நடைமுறையில் இருந்ததாக எனக்கு தெரியவில்லை.

நான்கு மாத அனுபவத்தில் என்னால் ஒரு முடிவுக்கு வர முடியாமல் கடந்த மூன்று வருடங்களாக இந்த பேருந்தை உபயோகப்படுத்தும் நண்பரிடமும் விசாரித்து இந்த கட்டுரையை எழுதியுள்ளேன்.

டிஸ்கி:

இதன் மூலம், நான் தமிழ் நாட்டின் எதிர்பாளன் என்று யாரும் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லப்பா !!! கொடுக்கும் காசுக்கு தரமான பொருள் கிடைக்க வேண்டும் என்று நினைக்கு ஒரு சாதாரண இந்தியன்.

Thursday, August 19, 2010

சுஜாதாவின் கொலையுதிர் காலம்

kolaiyuthirkaalam

பெட்டிகளில் முடங்கி கிடந்த சுஜாதா-வையும் சேத்தன் பகத்தையும் வெளியில் எடுத்தாகி விட்டது. சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கிய சில புத்தகங்கள் இன்னும் படிக்காமல் பணியிடம் மாற்றத்தினால் பெட்டிகளிலேயே முடங்கிக் கிடந்தன. அதை சென்ற வாரம் வெளியில் எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். முதலில் எடுத்த புத்தகம் “கொலையுதிர் காலம்”, சுஜாதா என்பதுகளில் எழுதி விற்பனையில் சக்கை போடு போட்ட நாவல் என்று கேள்விப்பட்டு அதன் புதிய பதிப்பை வாங்கியிருந்தேன். சுஜாதாவின் ஆஸ்தான கதாபாத்திரங்களாகிய கணேஷ், வசந்த் இதிலும் இருந்தனர். கதை ஆரம்பமான சில அதியாயங்களிலேயே வேகம் எடுக்க ஆரம்பிக்கிறது. இறுதி வரை விஞ்ஞானமும், பைசாசமும் சம பலத்தில் பயணித்தது மிகவும் நன்றாய் இருந்தது. கிரைம் கதைகளை விரும்பிப் படிக்கும் நண்பர்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும்.

என் பார்வையில்…

4a862_madharasapattinam-audio-launch-posters-02

தற்பொழுது படங்களை அதிகமாக பார்க்க முடிவதில்லை. புதிதாக வந்த படங்களில், சில நாட்களாக பார்க்க நினைத்த மெதராஸப்பட்டினம் படத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை பார்க்க முடிந்தது. இந்த படத்தில் என் மனதைத் தொட்ட மூன்று விஷயங்கள், எமி, ஆர்யா மற்றும் மெதராஸப்பட்டினம் சென்ரல் ஸ்டேசன்.

எமி & ஆர்யா நடிப்பு வெகு இயல்பாக இருந்தது. சென்ரல் ஸ்டேசன் இப்படி இருந்ததா என்று ஆச்சர்ய படும் அளவுக்கு அது ஒரு கதாபாத்திரமாகவே படம் முழுக்க வந்தது. சென்னையும், கூவமும் எந்த அளவுக்கு பாழ்பட்டு போயிருக்கிறது என்பதை இந்த படத்தை பார்த்து தெரிந்து விடுகிறது.

படத்தில் இருக்கும் காட்சிகள் லகான், டைட்டானிக் படங்களை ஞாபகப்படுத்தினாலும், படம் அலுக்காமல் செல்கிறது. G.V இசையில் பூக்கள் பூக்கும் தருணம் பாடல் படம் முடிந்த பிறகும் காதுகளில் ரீங்காரமிடுகிறது. நிச்சயம் பார்க்க வேண்டிய படம் புதிதான பழைய சென்னைக்காக...

Wednesday, August 4, 2010

சமையல் கலை

சென்னையில் இருந்த பொழுது மூன்று வேளையும் ஹோட்டல்களில் சாப்பிட நேர்ந்தது. பெங்களுரூக்கு இடமாறியது சமைத்து சாப்பிட வேண்டும் என்ற ஒரு தீர்க்கமான முடிவுடன் இருந்தேன். புதிதாக வீடு பிடித்து அதில் சமையல் செய்ய வேண்டிய உபகரணங்களை (கேஸ் அடுப்பு, சிலிண்டர், அது இது...) வாங்கி அடுக்குவதர்குள் பிரம்ம பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. பொருள்களைக்கூட வாங்கி விடலாம் போல, சமைப்பதும், சமைத்ததை கழுவி வைப்பதும் பெரும்பாடு. அது பழகுவதற்குத்தான் சில நாட்கள் பிடித்தது.

எல்லாம் சரியாகி கடந்த ஒரு மாதமாய் இரவு ஒரு வேளையும், வார இருதியில் மூன்று வேளையும் சமைக்கும் அளவுக்கு முன்னேறி விட்டோம். இதற்கிடையில் கல்லூரி நண்பரின் ஃபேமலியை ஒரு நாள் விருந்துக்கு அழைத்து அசத்தியது எவரஸ்ட் (ஒரு எஃபெக்ட்க்குத்தான்) ஏறி சாதித்த மகிழ்ச்சியை அளித்தது. மேலும் சில நாட்கள், கல்லூரி நண்பர்களை அழைத்து எல்லாரும் ஆளுக்கு ஒரு வேலையை செய்து விருந்து சாப்பாடு சாப்பிட்ட மகிழ்ச்சி அளவிலடங்காது.

சென்னையில் இருக்கும் பொழுது அலுவலகம் முடித்து வந்து அரட்டை அடித்து, ஃபாஸ்ட் புட் கடைகளிலும், அருகில் இருந்த சண்முகாஸ்-லும் சென்று சாப்பிட்டு தூங்குவது ஒரு வகை என்றால், பெங்களூரில் காலையில் (சில நாட்களில்...) எழுந்து சமைத்து, அலுவலகம் சென்று விட்டு வந்து, இரவு உணவையும் நாமும் நண்பர்களுடன் சேர்த்து சமைத்து, சாப்பிட்டு தூங்குவது இன்னொரு வகை. இரண்டு வகைகளும் சுவாரசியங்கள் அதிகமாக நிறைந்து இருக்கின்றன. நன்றாகவும் இருக்கிறது.

Life is beautiful...

டிஸ்கி: சமையல் குறிப்பு ஏதாவது இருந்தால் comment-ல் சொல்லலாம்...

Tuesday, August 3, 2010

Lakshmi Narasimma Temple, Bannerghatta, Bangalore

Last weekend we went to Lakshmi Narasimma perumal temple in Bannerghatta, Bangalore. It is around 12 Kms from Jeyadeva Hospital stop. We went there early morning at 6.30am. There are two temples in that area, one is in hillside and other is in hilltop. It is a old temple with huge Gopuram. One which is in hilltop seems to be recently built.

We went there by two wheeler so that we could feel the breeze of the early morning. When we reached there it was very calm and quiet inside the temple. Morning poojas were started at that time and we had a good darshan. After that we reach hilltop temple. The steps were some what sloppy due to the drizzling. Environment around that area was much pleasing and calm. Since Bannerghatta National park is very near to that place, we could see full of greenish area from the hilltop. We spent some time at the hill top and enjoy the drizzling.

It is a good place to go. Since Bannerghatta National park is nearby to this place, we could enjoy the safari drive there. Check out the photos of the temple...

31072010(004)

31072010(001)

 31072010(002)

31072010(003)

Sunday, August 1, 2010

Aasai – Short film

This is a good short movie. In the era of cell phone there are some persons are living like this among us. Check it out.

Hats off to the director.