Thursday, August 19, 2010

சுஜாதாவின் கொலையுதிர் காலம்

kolaiyuthirkaalam

பெட்டிகளில் முடங்கி கிடந்த சுஜாதா-வையும் சேத்தன் பகத்தையும் வெளியில் எடுத்தாகி விட்டது. சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கிய சில புத்தகங்கள் இன்னும் படிக்காமல் பணியிடம் மாற்றத்தினால் பெட்டிகளிலேயே முடங்கிக் கிடந்தன. அதை சென்ற வாரம் வெளியில் எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். முதலில் எடுத்த புத்தகம் “கொலையுதிர் காலம்”, சுஜாதா என்பதுகளில் எழுதி விற்பனையில் சக்கை போடு போட்ட நாவல் என்று கேள்விப்பட்டு அதன் புதிய பதிப்பை வாங்கியிருந்தேன். சுஜாதாவின் ஆஸ்தான கதாபாத்திரங்களாகிய கணேஷ், வசந்த் இதிலும் இருந்தனர். கதை ஆரம்பமான சில அதியாயங்களிலேயே வேகம் எடுக்க ஆரம்பிக்கிறது. இறுதி வரை விஞ்ஞானமும், பைசாசமும் சம பலத்தில் பயணித்தது மிகவும் நன்றாய் இருந்தது. கிரைம் கதைகளை விரும்பிப் படிக்கும் நண்பர்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும்.

No comments:

Post a Comment