Thursday, May 10, 2012

4G எனும் மாயை…

 

ஏர்டெல் 4ஜி-யை பெங்களூரில் அறிமுகப்படுத்தியுள்ளது. 100Mbps வேகத்தில் இணைய வசதியை வழங்க உள்ளது. அவர்கள் அறிவித்துள்ள வசதி ரூ.999 ஆரம்பிக்கிறது. இந்த இணைப்பு வசதிக்கு நாம் 6ஜிபி அளவிலான டேட்டாவை 100Mbps வேகத்தில் பெறலாம், அதற்குப் பிறகு இணையவேகம் அதளபாதாளமான 128Kbps-க்கு சென்று விடும்.

4g

இந்த விளம்பரத்தைப் பற்றி இணையத்தில் படித்த போது, அதில் ஒரு கமெண்ட் பார்க்க மிக நகைப்புக்கூரியதாகவும், யோசிக்க வைப்பதாகவும் இருந்தது. இதோ அது,

“இந்த இணைய இணைப்பு ப்ளான் எப்படி உள்ளதென்றால் உங்களிடம் உலகிலேயே அதிவேகமாக ஓடக்கூடிய ஒரு காரைக் கொடுத்து, அதில் ஒரு லிட்டர் பெட்ரோலே ஒரு மாததிற்கு நிரப்பப்படுமென்றும், நீங்க அதிக வேகத்தில் மூன்று கி.மீ மட்டுமே செல்லமுடியுமென்றும் சொல்வது போலுள்ளது”

மிக யோசிக்க வைக்கும் கமெண்ட். இந்தியர்கள் விரும்புவது, அதிவேகமான இணையம் என்பதைவிட, FUP (Fair Usage Policy) இல்லாத இணையம். இதை இன்னும் ISP-க்கள் புரிந்து கொள்ளவில்லையா, அல்லது புரிந்து கொள்ளாதது போல் நடிக்கின்றனரா என்பது தெரியவில்லை.

பாமரர்களும் உபயோகிக்க ஆரம்பித்துவிட்ட வேளையில், FUPயை எடுத்தால் இணையம் இன்னும் நிறைய பேரை சென்றடைய வாய்ப்புள்ளது.

வந்தேவிட்டார் சுஜாதா… 16 நாளில்

 

உயிர்மை பதிப்பகத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்த (கொடுமையான) அனுபவத்தை பகிரவே இந்த பதிவு.

அது ஒரு செவ்வாய்கிழமை. ஒரு பதிவில் சுஜாதா அவர்கள் எழுதிய குறுநாவல்களை நான்கு பாகங்களாக உயிர்மை பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர் என்று படித்தேன். நான் பெங்களூரில் வசித்து வருவதால், தமிழ் புத்தகங்கள் இங்கு அனைத்து கடைகளிலும் கிடைக்காததாலும், உயிர்மை பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள சுஜாதா அவர்களின் குறுநாவல்களில் மூன்று மற்றும் நான்காம் பாகங்களை(கணேஷ் வசந்த்) ஆன்லைனின் கடந்த 24-ஏப்ரல்-2012-ல் ஆர்டர் செய்தேன். அதில் ஆர்டர் செய்த ஆறுநாட்களில் கையில் கிடைத்துவிடும் என்று போட்டிருந்தார்கள். ஆனால் நடந்ததோ வேறு…

ஒரு வாரகாலமாகியிம் புத்தகங்கள் என் கையில் கிடைத்தபாடில்லை. அவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைத்தபோது புத்தகம் திங்கள்கிழமைதான்(30-ஏப்ரல்-2012) அனுப்பியுள்ளதாகவும் இன்னும் ஓரிருநாளில் கிடைத்துவிடும் என்று சொன்னார். குறிப்பாக புத்தகம் ரெஜிஸ்தார் தபாலில் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். (அப்பொழுது என் மனதில் எழுந்த ஒரு கேள்வி, ரெஜிஸ்தார் தபால்கள் ஆன்லைன் மூலம் டிராக் செய்யமுடியுமா ?)  இருந்தும் அவரிடம் ரெஜிஸ்தார் தபாலை டிராக் செய்ய ஏதேனும் எண்கள் இருந்தால் தாருங்கள் என்று கேட்டதற்கு அதுபோல் எதுவுமில்லை, இன்னும் ஓரிருநாளில் உங்கள் கைக்கு புத்தகம் வருமென்றார். சரி பொறுத்திருப்போம் என்றிருந்தேன்.

அந்த வாரமும் கடந்தது(புதன், வியாழன், வெள்ளி, சனி ஒவ்வொரு நாளும் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஞாபகப்படுத்துவதே என் வேலையாய் இருந்தது…), என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா… அதற்கு பிறகு திங்கள் கிழமை(7-மே-2012) அவர்களுக்கு தொலைபேசி செய்து அந்த ஆர்டரை கேன்சல் செய்துவிடுமாறு கூறினேன். இல்லையென்றால் பேங்கில் நானே பேசி அந்த பணப்பகிர்வை கேன்சல் செய்ய சொல்லிவிடவா?(எப்படி செய்வதென்று தெரியாமல்) என்று சொன்னதற்கு, இன்னும் ஏன் உங்களுக்கு வந்து சேரவில்லை என்று தெரியவில்லை, நாங்கள் கூரியர் மூலம் உங்களுக்கு அனுப்பிவிடுகிறோம் என்றார்கள் (இத முன்னமே செய்திருக்கலாமே). பிறகு கூரியர் அனுப்ப இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்டார்கள் ஏன் என்று தெரியவில்லை. இறுதியாக இன்று(10-மே-2012) மதியம் கூரியர் வந்தது.

ஒரு காக்கி பேப்பரில் புத்தகத்தை சுற்றி அனுப்பிருந்தார்கள், புத்தகம் மழையால் பாதிக்கப்படக்கூடியது, அதை ஒரு பாலித்தீன் கவரில் போட்டாவது கூரியரில் அனுப்பிருக்கலாம். அது புத்தகம்தான என கூரியர்காரர்கள் சரிபார்க்க அதையும் கிழிந்திருந்தார்கள் (என்ன கொடுமை சார் இது?). ஏதோ நான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் புத்தகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.

இந்த அனுபவத்தில் எனக்கு மனதில் தோன்றிய சில கேள்விகள்.

1. ரெஜிஸ்தார் தபாலை டிராக் செய்ய முடியுமா ? (நண்பர்களுக்கு தெரிந்தால் பின்னூட்டதில் பகிரவும்)

2. மக்களுக்கு சேவை செய்யும் ஒரு அரசு நிறுவனம் கூரியர்காரர்களுடன் போட்டி போடுமளவுக்கல்லவா இருக்க வேண்டும் ? (இன்னும் அந்த ரெஜிஸ்தார் தபால் எங்குள்ளது என்பது தெரியவில்லை)

3. உயிர்மை பதிப்பகத்தார் இதுபோன்ற எத்தனையோ அனுபவங்களை சந்தித்திருக்கக்கூடும், இருப்பினும் அவர்கள் ஏன் கூரியருக்கு மாறவில்லை ?

4. ஆன்லைனில் ஆர்டர் செய்த ஒரு வங்கி பகிர்வை எப்படி கேன்சல் செய்வது (ஒழுங்காக பொருள் கிடைக்காத பட்சத்தில்) ? (நண்பர்களுக்கு தெரிந்தால் பின்னூட்டதில் பகிரவும்)

இதன் மூலம் நான் கற்ற பாடம், இனிமே ஆன்லைனில் ஆர்டர் செய்வே ???

Saturday, May 5, 2012

My views on movies - Avengers (05/05/2012)



A movie about super heroes., yeah not constraint to a single one. This time a team of super heroes assembled by SHIELD (Secret agency of USA) with an objective to save the world from some E.T (Extra Terrestrial) as usual. In simple the one line of story(?) seems to boring and very old one, but thats where the super heroes are used.

Even the story seems to be so simple., the making and presentation of the movie bring you to the edge of the seat. Intro scenes of each heroes, contradiction within them, pushing and bringing them into a team are very well portrayed.

Comedy dialogues from Ironman and Hulk was well applauded from audience. Overall all its worth watching and you wont regret.

Friday, May 4, 2012

கலக்கி (04/05/2012)

ஹாலிவுட்:

சென்ற வாரம் பார்த்த படம் “The Incredible Hulk” மற்றும் “Bolt”. அவெஞ்சர்ஸ்(Avengers) படம் பார்க்க நினைத்ததால், அதன் முன்னோடிகளான தோர்(Thor), கேப்டன் அமெரிக்கா (Captain America), அயர்ன் மேன் (Iron Man 1 & 2) படத்தை ஏற்கனவே பார்த்து விட்டதாலும் ஹல்கை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்.

”The Incredible Hulk” எதிர்பார்த்த அள்வுக்கு நன்றாக இல்லை (பகலில் ஹல்க் சண்டை போடும் காட்சியைத்தவிர). இதற்கு முன் வெளியான ஹல்க் படத்தில் பலவகை கேமிரா கோனங்கள் ரசிக்க வைத்தன. இதில் அந்த நேர்த்தி மற்றும் வேகம் மிஸ்ஸிங்.

“Bolt” ஒரு அனிமேஷன் படம். குங்பூ பாண்டா ஏற்படுத்திய தாக்கம் அனிமேஷன் படங்கள் எனக்கு மிகப்பிடித்த ஒரு Genre-ஆக மாறிப்போனது. அனிமேஷன் படங்கள் பிடிக்கக் காரணமே அதில் இருக்கும் நையாண்டியான வசனங்கள்தான். போல்ட் ஒரு காமெடி படமானாலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒருமுறை பார்க்கலாம்

இணையவேகம்:

நான் எனது கைபேசியில் மாதம் ரூ.100 செலுத்தி 2ஜிபி பெறும் இணைய வசதி வைத்துள்ளேன். நகரத்தில் இருப்பதாலும் அதிகம் எழுத்து சார்ந்த அப்ளிகேஷன்களை உபயோகிப்பதாலும் EDGE கனெக்‌ஷனின் வேகம்(~100Kbps) போதுமானதாக இருந்தது. .

ஆனால் நகரை விட்டு வெளியே செல்ல நேர்கையில் இணைய வேகம் Kmphr-லிருந்து Cmphr-ஆக மாறத்தொடங்கி விடுகிறது. அலைபேசியில் EDGE என்று காண்பித்தாலும் வேகம் எடுக்க என்னவோ மிகவும் தள்ளாடுகிறது இணையம். இம்முறை மிகவும் எரிச்சலாகி கஸ்டமர் கேருக்கும் அலைத்தேன். அவர்களின் ஒரே பதில் EDGE-ன் இணைய வேகம் 10kbps-கிழ்தான் இருக்குமாம். அப்போ GPRS-ன் வேகம் என்ன என்று கேட்டதற்கு அவரிடம் பதிலே இல்லை. பின் அவர் எனக்கு 3ஜி இணையத்தைப் பரிந்துரைத்தார். நான் இருக்கும் நகரில் 3ஜி டவர் இருக்கிறதா என்று அவரிடம் விசாரித்தேன். இல்லை என்றார். பின் எப்படி எனக்கு பரிந்துரைக்கிறீர்கள் என்று கேட்டதறகு மெளனமே பதிலானது.

இணையவேகம் பற்றி இணையத்தில்(அலுவலகத்தில்) தேடியபோது கிடைத்த தகவல்.

இந்தியாவை பொருத்தவரை இருக்கவேண்டிய இணையவேகம்

EDGE – average 135Kbps

GPRS – average 35Kbps

இணையம் என்பது இன்றியமையாததாக ஆகிவிட்ட இக்காலத்தில், (இந்தியாவில் மட்டும்) இணைய வசதியை ஏற்படுத்துவதில் நாம் இன்னும் கற்காலத்தில்தான் இருக்கிறோம்.

புத்தகம்:

சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கிய சில புத்தகங்கள் ஊரில் இருந்தன. இந்த முறை ஊருக்கு சென்ற பொழுது மின் தடையின் பலனாக (பகலில் மட்டும்) புத்தகம் படிக்க முடிந்தது. அப்படி படித்தது தான் கிழக்குப் பதிப்பகத்தாரின் திரு. ஆர். முத்துக்குமார் எழுதிய ”மகா அலெக்ஸாண்டர்

978-81-8368-637-2_b-500x500

அலெக்சாண்டரின் வரலாறு எளிய நடையில், சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. ஆங்காங்கே சில நேரங்களில் தடம் மாறினாலும் அலெக்சாண்டரைப் பற்றி எல்லா விஷயங்களும் சொல்கிறார். 160 பக்கங்களில் அலெக்சாண்டரின் வாழ்க்கை, வீரம், போர்முறை, அரிஸ்டாடில், மாசிடோனியா, பிலிப் எல்லாரையும் பற்றியும் சொல்வதென்றால் கடினம்தான். இந்த புத்தகத்தைப் படிக்கும்பொழுது கிரேக்க நாகரீகத்திற்கு கிளாடியேட்டர்/300 படமும், அலெக்சாண்டராக ரசல்குரோவும் மனதில் தோன்றியவண்ணம் இருந்தார்கள்

iPhone – என் போன் – 2 (Reeder)

இந்த பதிவுல நான் சொல்லப்போறது Reeder(இது தாங்க கரெக்ட் ஸ்பெல்லிங்) என்கிற ஐபோன் அப்ளிகேஷனைப் பற்றி. இது நான் தினம் பயன்படுத்தும் ஒரு ஐபோன் அப்ளிகேஷன். இதனுடைய பயன்பாடு நம்முடைய கூகுள் ரீடரை ஐபோனுக்கு கொண்டுவருவதே. நீங்கள் அதிகம் கூகுள் ரீடரை உபயோகிப்பவராக இருந்தால் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கானது.

1

ss2

இதில் நாம் கூகுள் ரீடரில் பதிந்துள்ள அத்தனை வலைப்பூக்களையும் படிக்கலாம். சில தேவையில்லாத பதிவுகளை வலது புறம் ட்ராக் செய்வதின் மூலம் Mark as Read ஆக மாற்ற முடிவது மிக எளிதில் கையாளக்கூடிய வசதியாகும். பதிவுகளை இடது புறம் ட்ராக் செய்வதின் மூலம் Starred  கட்டளை பிறப்பிக்கலாம்.

நாம் நன்றாக இருக்கிறது என்று நினைக்கும் பதிவுகளை நம் நண்பர்களுக்கு டிவிட்டர்/ஃபேஸ்புக் மூலமாக பகிரலாம். இத்துடன் மேலும் சில வசதிகளும்(Read it later/Readability etc..,) இதில் உள்ளன.

இதன் முக்கிய உபயோகமாக நான் கருதுவது, நம்மிடம் எப்போதும் அதிவேக இணையம் இருக்கும் என்று சொல்ல முடியாது., நமக்கு அதிவேக இணையவசதி கிடைக்கும் பொழுது (பொதுவாக அலுவலகத்தில்) நாம் அன்றைய வலைப்பதிவுகளை தரவிறக்கும் செய்து, நமக்கு வீட்டில் (இணையவசதி இல்லாதிருப்பினும்) ஓய்வு நேரம் கிடைக்கும் போது படிக்க முடிகிறது.

இதன் விலை $2.99 (அதிகமாகத்தோன்றினாலும் உபயோகமான முதலீடு)

iTunes சுட்டி

Saturday, April 21, 2012

கலக்கி (22/04/2012)

 

தமிழ் சினிமா:

சிவகார்த்திகேயன் – காமெடியை ரசிக்கும் நண்பர்களுக்கு நிச்சயமாக பரிச்சயமான ஒரு முகம். விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பிரபலமாகி இன்று தமிழ் நாட்டையே தன் டைமிங் காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு பிரபலம். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு இவரும் சந்தானமும் ஒரு சிறந்த உதாரணம்.

siva-karthikeyan-03

இவர்களை வளர்த்து விட்டதில் விஜய் டிவிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதை மற்ற டிவி ஆன்கர்களின் திரைவளர்ச்சியிலேயே நாம் பார்த்துவிடலாம். டைமிங்காமெடியில் அசத்துவதற்கு இவருக்கு நிகர் இவரே. நான் அடிக்கடி பார்த்து சிரிக்கும் இவரது காமெடி உங்களுக்காக…

 

 

ஹாலிவுட் சினிமா: 

இந்த வாரம் பார்த்த படம் "Sherlock Holmes 2 - A Game of Shadows". இது ஷெர்லாக் ஹோம்ஸின் இரண்டாவது படம். முதல் படத்தை விட இது இன்னும் சிறப்பாக உள்ளது. நிச்சயம் பார்க்க வேண்டிய படம். ஷெர்லாக் ஹோம்ஸ் மற்றும் அந்த கதையில் வரும் கேரக்டர்களின் குணாதிசயங்களை பிரபல பதிவர் திரு.கருந்தேள் வெகு சிறப்பாக விவரித்துள்ளார். அதைப் படிக்க இந்த சுட்டியை அழுத்தவும்

Sherlock Holmes 2: A Game of Shadows (2011) – English

Sherlock Holmes 2:A Game of Shadows (2011) - Part2

இவர் விவரித்துள்ள விஷயத்தை படிக்கும் பொழுது நம் கணேஷ் வசந்த் ஜோடி ஞாபகத்துக்கு வருகிறார்கள். இதுவும் அது போல கிரைம் நாவல் அல்லது சிறு கதைதான். நேரம் இருந்தால் படிக்கணும்.

அடுத்ததாக பார்க்க எண்ணியிருக்கும் படம் “Money Ball”. ஆறு பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படம். ஒரு பேஸ்பால் குழுவின் மேலாளராக இருக்கும் பில்லிபீன் (பிராட்பிட்), தங்களுக்கு கொடுத்துருக்கும் பட்ஜெட்டில் ஒரு கணிணி உதவியாளருடன் சேர்ந்து எப்படி ஆட்டக்காரர்களை எடுக்கிறார் என்பது பற்றியது.

 

திருவிழா:

சித்திரை தொடங்கிவிட்டாலே மதுரையில் விழாக்காலம் ஆரம்பித்துவிடும். தமிழகத்தின் முக்கியமான திருவிழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் சித்திரைத் திருவிழா அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. அதன் நிகழ்ச்சி நிரலை கீழே இணைத்துள்ளேன்.
மதுரை நகரமாகிவிட்டதாலும், மற்றும் சில பாதுகாப்பு காரணங்களாலும் வைகை ஆற்றில் நான்கு நாட்கள் நடந்து கொண்டிருந்த திருவிழா இப்பொழுது இரண்டு நாளில் முடிந்து விடுகிறது. ஆனால் வைகை ஆற்றங்கரையில் இருக்கும் வேறு சில ஊர்களில் இன்னும் அந்த திருவிழா ஆற்று மணலில் பெளர்ணமி நிலவில் நான்கு நாட்கள் நடந்து கொண்டுதானிருக்கிறது.
மதுரை சித்திரை திருவிழா 2012 – நிகழ்ச்சி நிரல்
23-04-12 - திங்கள் - சித்திரை திருவிழா கொடியேற்றம்
26-04-12 - வியாழன் - தங்க பல்லாக்கு
28-04-12 - சனி - ரிஷப வாஹனம்
30-04-12 - திங்கள் - ஸ்ரீ மீனாக்ஷி பட்டாபிஷேகம்
01-05-12 - செவ்வாய் - ஸ்ரீ மீனாக்ஷி திக்விஜயம்
02-05-12 - புதன் - ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
02-05-12 - புதன் - புஷ்பா பல்லாக்கு
03-05-12 - வியாழன் - திரு தேர் தேரோட்டம் கள்ளழகர்
05-05-12 - சனி - தல்லாகுளத்தில் எதிர் சேவை
06-05-12 - ஞாயிறு - ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருரல்
08-05-12 - செவ்வாய் - கள்ளழகர் புஷ்பா பல்லாக்கு

Tuesday, April 17, 2012

The “new iPad” இப்பொழுது இந்தியாவில்

ipadnewthe
ஆப்பிளால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐபேட் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. வரும் ஏப்ரல் 27 முதல் இது இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும். இதன் இந்திய விலை Wi-Fi models Rs. 30500 (16GB), Rs. 36500 (32GB), and Rs. 42500 (64GB) மற்றும் Wi-Fi+4G Rs. 38900 (16GB), Rs. 44900 (32GB), and Rs. 50900 (64GB) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் எப்போதுமே அதிக விலைதான்.

சமீபத்தில் இந்தியாவில் 4G தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருந்தாலும் இந்த புதிய ஐபேட் இந்தியாவில் இருக்கும் 4G தொழில்நுட்பத்துடன் ஒத்துப்போகாது(not compatible) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் ஏற்கனவே இருக்கும் 3ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டியிருக்கும்.

Monday, April 16, 2012

iPhone – என் போன்–1 (Tweetbot)

நான் ஐ-போன் வாங்கி ஒரு வருடம் ஆகப்போகின்றது. முதல் ஐ-போன் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து வாங்க வேண்டும் ஒரு ஆவல் மனதில் எழுந்தாலும் நிறைவேறியதோ ஐ-போன் 4வது பதிப்பில்தான். அதுவும் மிகுந்த யோசனைகளுக்குப்பின்னரே வாங்கினேன். இதுநாள் வரையில் இவ்வளவு விலை கொடுத்து ஒரு போனை வாங்கிவிட்டோமே என்ற நினைப்பு, கவலை, வருத்தம் வரவில்லை. அதற்கு முழுமுதற்காரணம் ஐ-போன்களில் உள்ள அப்ளிகேஷன்கள்.

ip5(1)

ஐ-போனின் ஒவ்வொரு அப்ளிகேஷன்களின் வடிவைப்பும், அதன் பயன்பாடுகளும், தினம் தோன்றும் புதுவகை அப்ளிகேசன்களும், ஒவ்வொரு அப்டேட்டிலும் அவர்கள் கொடுக்கும் புது சிறப்புகளும், நாளுக்கு நாள் ஐ-போன்களை புதிதாக்கிக் கொண்டிருக்கிறதேயொழிய பழைய பயன்பாட்டை மட்டுமே வைத்துக் கொண்டு நம்மை சோர்வுறவைக்கவில்லை.

இது போன்ற விஷயங்கள் ஆன்ராய்டிலும் இருக்கிறதே என்று நினைப்பவர்களுக்கு ஒரு சிறிய உதாரணம். ஐபோன் உபயோகிப்பது விண்டோசை உபயோகிப்பது போல் மிகவும் எளிது ஆனால் ஆன்ராய்ட் லினக்ஸ் போன்றது கம்பியுட்டர் வல்லுநர்களையே தடுமாறவைப்பது. ஐபோன் உபயோகிப்பதில் விண்டோசைப் போன்றதே தவிர அதனிலுள்ள மென்பொருளானது மிகவும் தேர்ந்தது.

ஆனால் இந்த பதிவு ஐபோன் பெரிதா, ஆன்ராய்ட் பெரிதா என்பது பற்றியல்ல. அதனால், விஷயத்துக்கு வருவோம், நான் முன்பே குறிப்பிட்டது போல், ஐபோனின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதற்காக வடிவமைக்கப்படும் அப்ளிகேஷன்கள். நான் கடந்த ஒரு வருட காலமாக நிறைய அப்ளிகேஷன்களை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதை தங்களுடன் பகிரவே இந்த பதிவு.

இந்த முதல் பதிவில் நான் பகிரவிருக்கும் அப்ளிக்கேஷன் டிவிட்டர் பயன்பாட்டாளர்களுக்கு. அதன் பெயர் டிவிட்பாட்(Tweetbot - http://tapbots.com/software/tweetbot/)

screenshot_02

இந்த அப்ளிக்கேஷன் டிவிட்டர் பயன்பாட்டாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கின்றது. டிவிட்டரில் உள்ள அத்தனை சிறப்பம்சங்களையும் இரண்டு அல்லது மூன்று டச்களின்மூலம் இதில் நாம் செய்யமுடிவது இதன் தனிப்பெரும் தன்மை. இது டிவிட்டர் இலவசமாக கொடுக்கும் நேடிவ் டிவிட்டர் அப்ளிகேசனை விட எளிதில் பயன்படுத்தக்கூடியதாகவும்., குறைவான இணைய வேகத்திலும் எளிதில் டிவிட்டக் கூடியதாகவும் இருக்கின்றது.

டிவிட்டர் பயன்பாட்டாளர்கள் மிகவும் பயன்படுத்தக் கூடியதான லிஸ்ட்(lists) பயன்பாடு இதில் அதன் மேலுள்ள டைம்லைனை கிளிக் செய்வதின் மூலம் நாம் வேறு லிஸ்ட்டின் டைம்லைனில் மாறமுடிகிறது. இதன் விலை 2.99$. சிலருக்கு அதிகமாகத்தோன்றினாலும் இதில் உள்ள பயன்பாட்டுக்கு ஏற்றவிலைதான். சிலநேரங்களில் 0.99$க்கும் கிடைக்கிறது ஆனால் எப்பொழுது என்று சரியாக சொல்ல முடிவதில்லை.

டிஸ்கி:

இங்கு பகிரப்படும் அப்ளிகேஷன்கள் நான் பயன்படுத்திய பின்னர் எனக்கு உபயோகமுள்ளதாகக் கருதுவதால் மட்டுமே பகிரப்படுகிறது. நீங்க வாங்கி உங்களுக்கு பிடித்தலும் பிடிக்காமல் போவதற்க்கும் கம்பேனி பொருப்பல்ல Winking smile

கலக்கி (15/04/2012)

சினிமா:

இந்த வாரம் பார்த்த படம் ”ஒரு கல் ஒரு கண்ணாடி”(OKOK)., சந்தானம் புகுந்து விளையாடுகிறார்., இது அவருடைய படம் என்று சொல்ல எல்லா தகுதியும் உண்டு (சந்தானத்தின் அறிமுக காட்சியில் தியேட்டரில் எழுந்த கைதட்டல்களே இதற்கு சாட்சி). உதயநிதி ஸ்டாலின் ஒரு நல்ல சப்போர்ட்டிங் ஆர்டிஸ்டாக செய்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு விழாவில் விக்ரமன் சொன்னது சரி என்றே தோன்றுகிறது. இசையமைப்பாளருக்கு கோடிக்கணக்கில் அள்ளித்தருவதை வீண். இதற்கு பதில் பாலச்சந்தர் சார் கேளடி கண்மணி படத்தில் செய்ததைப் போல் செய்து விடலாம் (ராஜா வேறு படத்தில் பிஸியாக இருந்ததால் இளையராஜாவின் இசைக் கோர்வையை பிண்ணனிக்கு தக்கவாறு அவரே பயன்படுத்தி ரிக்கார்டிங் செய்தது). ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் அட்டர் வேஸ்ட்.

பில்லா-2 படத்தின் டீஸர் வெளியிட்டு இருக்கிறார்கள். ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது. “என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிமிசத்தையும் ஏன் ஒவ்வொரு நொடியையும் நானே செதுக்குனதுடா!!!”. நிச்சயம் மங்காத்தா அளவு பெரிய ஓப்பனிங் இந்த படத்துக்கும் இருக்கும்.

ஹாலிவுட் சினிமா:

நண்பனின் பரிந்துரையின் பேரில் பார்த்த படம் “Full Metal Jacket”. வியட்நாம் போருக்காக தயார்படுத்தப்படும் வீரர்கள் பற்றிய படம். அவர்கள் மனதில் தங்களது பணி, எதிரியை கொல்வதே என்ற இலக்கை எப்படி விதைக்கிறார்கள் என்று பற்றி சொல்கிறார்கள். வசனங்களின் கெட்டவார்த்தைகளின் நெடி மிக அதிகம். எனக்கு இந்த படத்தில் மிகப்பிடித்த வசனம் (வியட்நாம் போர்களத்தில் ஒரு வீரர் பேசுவது) “I wanted to see exotic Vietnam, the crown jewel of Southeast Asia. I wanted to meet interesting and stimulating people of an ancient culture... and kill them”

புது விஷயம்:

ஜானி படத்தில் வரும் என் வானிலே பாடலை இதுவரை ஜென்சி பாடியதென்று நினைத்திருந்தேன். நேற்று ஃபேஸ்புக்கில் “தெரிந்த சினிமா தெரியாத விஷயம்” பக்கத்தில் அது பாடகி சுஜாதாவின் முதல் பாடல் என்று போட்டிருந்தார்கள். ராஜா சார் இரண்டு பேரையும் பாட வைத்து இரு தடவை ரெக்கார்டிங் பண்ணாரா ? படத்தில் இடம்பெறுவது யாருடைய பாடல், விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும். கீழே இருக்கும் வீடியோவில் வரும் குரல் சுஜாதா அவர்களின் குரல் போலுள்ளது.

கிரிக்கெட்:

ஐபிஎல் ஆரவரமாக நடந்து கொண்டிருக்கிறது. முன்பு போல் வெளிநாட்டவரின் ஆக்கிரமிப்பு இல்லாமல் நிறைய இந்திய புதுமுகங்கள் கலக்கிக் கொண்டிருப்பது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயம். 20-20 உலகக் கோப்பை வரப்போகும் நிலையில் ராஹானே, ஓ.சா, ஹர்மீட் சிங், அகர்வால் போன்ற இளரத்தங்கள் கலக்கிக் கொண்டிருப்பது அவர்களை அடுத்த உயரத்திற்கு அழைத்துச் செல்லும் ஏணியாக நிச்சயம் அமையும்.