Thursday, May 10, 2012

4G எனும் மாயை…

 

ஏர்டெல் 4ஜி-யை பெங்களூரில் அறிமுகப்படுத்தியுள்ளது. 100Mbps வேகத்தில் இணைய வசதியை வழங்க உள்ளது. அவர்கள் அறிவித்துள்ள வசதி ரூ.999 ஆரம்பிக்கிறது. இந்த இணைப்பு வசதிக்கு நாம் 6ஜிபி அளவிலான டேட்டாவை 100Mbps வேகத்தில் பெறலாம், அதற்குப் பிறகு இணையவேகம் அதளபாதாளமான 128Kbps-க்கு சென்று விடும்.

4g

இந்த விளம்பரத்தைப் பற்றி இணையத்தில் படித்த போது, அதில் ஒரு கமெண்ட் பார்க்க மிக நகைப்புக்கூரியதாகவும், யோசிக்க வைப்பதாகவும் இருந்தது. இதோ அது,

“இந்த இணைய இணைப்பு ப்ளான் எப்படி உள்ளதென்றால் உங்களிடம் உலகிலேயே அதிவேகமாக ஓடக்கூடிய ஒரு காரைக் கொடுத்து, அதில் ஒரு லிட்டர் பெட்ரோலே ஒரு மாததிற்கு நிரப்பப்படுமென்றும், நீங்க அதிக வேகத்தில் மூன்று கி.மீ மட்டுமே செல்லமுடியுமென்றும் சொல்வது போலுள்ளது”

மிக யோசிக்க வைக்கும் கமெண்ட். இந்தியர்கள் விரும்புவது, அதிவேகமான இணையம் என்பதைவிட, FUP (Fair Usage Policy) இல்லாத இணையம். இதை இன்னும் ISP-க்கள் புரிந்து கொள்ளவில்லையா, அல்லது புரிந்து கொள்ளாதது போல் நடிக்கின்றனரா என்பது தெரியவில்லை.

பாமரர்களும் உபயோகிக்க ஆரம்பித்துவிட்ட வேளையில், FUPயை எடுத்தால் இணையம் இன்னும் நிறைய பேரை சென்றடைய வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment