Showing posts with label கட்டுரை தொடர். Show all posts
Showing posts with label கட்டுரை தொடர். Show all posts

Friday, May 4, 2012

iPhone – என் போன் – 2 (Reeder)

இந்த பதிவுல நான் சொல்லப்போறது Reeder(இது தாங்க கரெக்ட் ஸ்பெல்லிங்) என்கிற ஐபோன் அப்ளிகேஷனைப் பற்றி. இது நான் தினம் பயன்படுத்தும் ஒரு ஐபோன் அப்ளிகேஷன். இதனுடைய பயன்பாடு நம்முடைய கூகுள் ரீடரை ஐபோனுக்கு கொண்டுவருவதே. நீங்கள் அதிகம் கூகுள் ரீடரை உபயோகிப்பவராக இருந்தால் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கானது.

1

ss2

இதில் நாம் கூகுள் ரீடரில் பதிந்துள்ள அத்தனை வலைப்பூக்களையும் படிக்கலாம். சில தேவையில்லாத பதிவுகளை வலது புறம் ட்ராக் செய்வதின் மூலம் Mark as Read ஆக மாற்ற முடிவது மிக எளிதில் கையாளக்கூடிய வசதியாகும். பதிவுகளை இடது புறம் ட்ராக் செய்வதின் மூலம் Starred  கட்டளை பிறப்பிக்கலாம்.

நாம் நன்றாக இருக்கிறது என்று நினைக்கும் பதிவுகளை நம் நண்பர்களுக்கு டிவிட்டர்/ஃபேஸ்புக் மூலமாக பகிரலாம். இத்துடன் மேலும் சில வசதிகளும்(Read it later/Readability etc..,) இதில் உள்ளன.

இதன் முக்கிய உபயோகமாக நான் கருதுவது, நம்மிடம் எப்போதும் அதிவேக இணையம் இருக்கும் என்று சொல்ல முடியாது., நமக்கு அதிவேக இணையவசதி கிடைக்கும் பொழுது (பொதுவாக அலுவலகத்தில்) நாம் அன்றைய வலைப்பதிவுகளை தரவிறக்கும் செய்து, நமக்கு வீட்டில் (இணையவசதி இல்லாதிருப்பினும்) ஓய்வு நேரம் கிடைக்கும் போது படிக்க முடிகிறது.

இதன் விலை $2.99 (அதிகமாகத்தோன்றினாலும் உபயோகமான முதலீடு)

iTunes சுட்டி

Wednesday, July 9, 2008

2. நான் மாட கூடல் எனும் மதுரை

இந்தியாவில் உள்ள மிக பெரிய கோவில்களுள் ஒன்று மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவில். இது குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டது. ஆனால் அது இயற்கை சீற்றங்களால் சற்று அழிவுபெற்றது.

இப்போதுள்ள கோவில் விஸ்வநாத நாயகரால் வடிவம் பெற்று திருமலை நாயகரால் கட்ட பெற்றது. இந்த கோவிலை நான் மாடக்கூடல் என்று சொல்வர். நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்கள் இருப்பதால் இத்தளம் இப்பெயர் பெற்றது. நான்கு திசைகளிலும் கோபுரங்களை முதன்மையாக கொண்டு ஆடி, சித்திரை, மாசி மற்றும் வெளி வீதி என்று மதுரை அந்த காலத்திலே மிகவும் திட்டமிட்டு கட்டப்பட்டதாகும்.


மதுரை கோவிலில் சுமார் 3.3 கோடி சிற்பங்கள் உண்டு என்று கணகிடபட்டுள்ளது. இப்பொழுதுள்ள கோவில் திராவிட கலாச்சாரத்தை அடிபடையாக கொண்டு கட்டப்பட்டதாகும். இக்கோவிலில் இப்பொழுது 12 உள் கோபுரங்கள் மற்றும் 4
உயரமான கோபுரங்கள் உள்ளன. அதனுள் தெற்கு திசையில் உள்ள கோபுரம் மிகவும் உயரமானது. இது 49 மீட்டர் உயரம் உடையது.

இக்கோவிலுள்ள அஷ்ட ஷக்தி மண்டபத்தில் திருவிளையாடல் புராணமும், மீனாக்ஷி அம்மன் மதுரை இளவரசியாக இருந்த புராணமும் சிற்பங்களாக வடிக்க பட்டுள்ளன. பொற்றாமரை குளம் மீனாக்ஷி அம்மனின் இடது புறம் அமைந்துள்ளது. இந்த குளத்தில்தான் நம் முன்னோர்கள் தமிழ் செய்யுள்களை மதிப்பீடு செய்தனர்.

செய்யுள்கள் எழுதி முடித்த பின்னர் அவை இக்குளத்தில் போடப்படும். மூழ்கியபின் மேலே மிதக்கும் சுவடுகளை தமிழில் சிறந்தது என்று கருதுவர். உலக பொதுமறையாம் திருக்குறள் இவ்வாறு மதிப்பீடு செய்தது என்று ஒரு வரலாறும் இங்கு நிலவுகிறது.

கோவிலின் மேற்கில் ஊஞ்சல் மண்டபமும், கிளி கூட்டு மண்டபமும் அமைந்துள்ளன. கிளி கூட்டு மண்டப்பத்தில் கிளிகள் மீனாக்ஷி தாயின் பெயரை உட்சரித்து கொண்டிருக்கும். வெள்ளிதோறும் ஊஞ்சல் மண்டபத்தில் மீனாக்ஷி தேவியின் உற்சவ சிலையை வைத்து பூஜ்ஜிப்பர்.

இந்திரன் சொக்கநாதரை பூஜித்த கடம்ப மரத்தின் கன்று இக்கோவிலில் இப்பொழுது காணலாம். கோவிலின் வெளி புறத்தில் கம்பத்தடி மண்டபமும் வெள்ளி அம்பலமும் அமைந்துள்ளன. மீனாக்ஷி சுந்தரேஷ்வரரின் திருமண காட்சியை இந்த மண்டபத்தில் சிற்பமாக வடித்துள்ளனர். சிவபெருமான் நாட்டியமாடும் ஐந்து மண்டபங்களில் இந்த வெள்ளி அம்பலமும் ஒன்று. (மற்ற நான்கு மண்டபங்கள்: சிதம்பரம், திருவாலங்காடு, திருநெல்வேலி மற்றும் குற்றாலம்).

இங்கு உள்ள நடராஜர் சிலை மேலும் சிறப்பு பெற்றது. இங்குள்ள நடராஜர் சிலை
வலது காலை தூக்கி ஆடும் விதமாக அமைய பெற்றுள்ளதே இதன் சிறப்பு அம்சமாகும். மன்னன் ராஜசேகர பாண்டியனின் வேண்டுகோளுக்கிணங்க நடராஜர் இப்படி ஆடியதாக கூறப்படுகிறது. நடராஜர் சிலை வெள்ளியால் செய்ய பெற்றுள்ளதால் இதற்கு வெள்ளி அம்பலம் என்று பெயர் வந்தது.


இங்கு அமைந்துள்ள ஆயிரம் கால் மண்டபம் மேலும் சிறப்பு பெற்றதாகும். இது 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த மண்டபத்தின் வெளியில் இசை எழுப்பும் தூண்கள் அமயபெற்றுள்ளன. இதை தட்டும் பொழுது வெவ்வேறு விதமான இசைகளை எழுப்பும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இங்கு அமைத்துள்ள முக்குறுணி விநாயகர் சிலை, கோவிலுக்கு மூன்று கிலோ மீட்டர் தொலைவில், திருமலை நாயகர் கோவிலுக்காக குளம் வெட்டுகையில் தோண்டி எடுக்க பட்டது. இன்றும் இக்குளம் தெப்பகுளம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

இக்குளத்திற்கு என்று தனியாக விழாவும் நடக்கிறது. நான் மாட கூடலில் நாம் வியக்கும் வகையில் மேலும் சிறப்புகள் ஏராளமாக உள்ளன. அதை தொகுத்து அடுத்த பதிவில் வழங்குகிறேன்.

நன்றி

தொடரும்...

Sunday, June 29, 2008

1. தஞ்சை பெரிய கோவில் கோபுரம்



வியக்க வைக்கும் கட்டிட கலை என்ற தலைப்பை முடிவு செய்ததுமே என் கண்முன் தோன்றிய முதல் கோவில் நமது தஞ்சை பெரிய கோவில்.

தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பு அம்சமே அதன் ஒற்றை கல் கோபுரமும், பெரிய கோவில் நந்தி என்று அனைவராலும் அழைக்கப்படும் தஞ்சை கோவில் நந்தியும்தான்.

தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிருகதீசுவரர் கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது.

தஞ்சை பெரிய கோவிலின் விமான கோபுரம் 216 அடி ஆகும். கூம்பு போன்ற வடிவமுடைய கோவில்களில் இதுவே உயரமான கட்டமைப்பு ஆகும்.
அந்த கூம்பு அமைப்பு சுமார் 81.25 டன் எடை உடையது ஆகும்.
இந்த ஒற்றை கல்லால் செய்யப்பட கோபுர கூம்பை எடுத்து செல்ல அந்த காலத்திலேயே நாலு மையில் நீளத்திற்கு சாரம் கட்டப்பட்டதாம். சாரம் ஆரம்பம் ஆனா ஊரை இன்றும் சாரங்கட்டி (அல்லது) சாரபள்ளம் என்று மக்கள் அழைகின்றனர். 81.25 டன் எடை கொண்ட அந்த கல்லை சாரத்தின்
மீது உருட்டி சென்று கோபுரத்தின் மேல் வைத்ததாக வரலாறு சொல்கிறது.

கோபுரத்தின் மீது இருக்கும் கலசம் 12.5 அடி உயரமுடயதகும். 9.25 எடையுள்ள செம்பாலான கலசத்தின் மீது சுமார் 800 கிராம் தங்கத்தால் முலாம் பூசபட்டுள்ளதாம்.

தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடரும்...

வியக்க வைக்கும் கட்டிட கலை - கட்டுரை தொடர்

உலகை வியக்க வைக்கும் கலைகளில் தமிழர்களின் கட்டிட கலையும் ஒன்று. அதனால் தான் இன்றும் வெளி நாட்டவர்கள் இந்திய மன்னர்களால் உருவாக்கப்பட்ட கோவில்களை காண பெருமளவில் இந்தியாவிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இப்படிப்பட்ட கோவில்களை கட்டும் போது எல்லோரையும் வியக்க வைக்கும் வகையிலும், கோவில்களை கட்டுபவரின் பெருமையை என்றும் பறை சார்ட்டும் விதமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக நமது பண்டை கால மன்னர்கள் பல கட்டிட கலை யுக்திகளை கையாண்டு அரிய சில விஷயங்களை செய்து வைப்பார்.

அப்படி பட்ட விஷயங்கள் அந்த கோவிலின் பெருமையை மேலும் ஒரு படி உயர செய்யும். இது போன்ற விஷயங்களை ஒரு கட்டுரையாக தொகுக்கும் முயற்சியின் முதல் படி இந்த பதிவு.