Thursday, November 13, 2008

இந்தியன் ரயில்வேயின் TTE

 

இங்கே நான் சொல்ல இருப்பது, எனது நண்பனுக்கு ரயிலில் பயணிக்கும் பொழுது ஏற்பட்ட காமெடி கலந்த கசப்பான அனுபவம்.

Indianrailways_1_1அந்த அனுபவத்தை கூறும் முன் இந்திய ரயில்வேயில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு விதியை இங்கு நான் சுட்டிக்காட்ட விளைகிறேன்.

இங்கு கீழே கொடுத்திருப்பது முன்பு இருந்த விதி.

oldproof

இந்த விதிப்படி டிக்கெட் எடுத்தவர், பரிசோதகரிடம் தன்னிடம் உள்ள அடையாள அட்டையை (டிக்கெட் பதிவு செய்யும் பொழுது குறிப்பிட்டது) காண்பித்து இரயிலில் அனுமதி பெற வேண்டும்.

இப்போது இந்த விதி சற்று தளர்த்தப்பட்டு உள்ளது. இப்பொழுதுள்ள விதிப்படி டிக்கெட் பதிவு செய்யும் பொழுது நாம் எந்த வித அடையாள அட்டையையும் குறிப்பிட தேவையுமில்லை. மேலும், இரயிலில் டிக்கெட் பரிசோதகரிடம் அப்போது நம்மிடம் உள்ள ஏதாவது ஒரு அடையாள அட்டையை (அசல்) காண்பித்தால் போதுமானது.

இப்போது என் நண்பனுக்கும், இந்திய இரயில்வேயின் பரிசோதகருக்கும் நடந்த சுவையான அனுபவம்.

நண்பன்: (டிக்கெட்டை மற்றும் பான் அட்டையை பரிசோதகரிடம் கொடுக்க...)

பரிசோதகர்: என்ன டிக்கெட்ல எந்த அடையாள அட்டை எண்ணையும் அச்சிடப்படவில்லை. எங்கே இதை எடுத்தீங்க ? (பக்கத்தில் இருப்பவரிடமிருந்து இருந்து ஒரு E-Ticket யை வாங்கி) இத பாருங்க இந்த டிக்கெட்ல எல்லாம் இருக்கு.

நண்பன்: (பக்கத்தில் இருப்பவரிடம்) சார் இதை எப்போ ப்ரிண்ட் எடுத்திங்கன்னு தெரிஞ்சிக்கலாமா ?

பயணிப்பவர்: மூன்று மாதத்திற்கு முன்பு

நண்பன்: (பரிசோதகரிடம்) சார் நான் நேற்றுதான் இதை ப்ரிண்ட் எடுத்தேன். இந்த விதி ஒரு மாதத்திற்கு முன்பே மாற்றப்பட்டு விட்டது. அதனால் தான் எந்த அடையாள அட்டை எண்ணையும் அச்சிடப்படவில்லை. அதுவும் இல்லாமல் இதிலேயே சொல்லிருக்கே, எந்த அடையாள அட்டையும் காட்டலாம் என்று.

பரிசோதகர்: அதெல்லாம் எங்களுக்கு தெரியாது சார், நீங்கதான் சரியா எடுத்து வந்திருக்கனும். நான் நினைத்தா உங்களை அடுத்த நிறுத்தத்துல இறக்கி விட முடியும். ஒழுங்கா அடுத்த தடவை வரும் பொழுது சரியா எடுத்து வாங்க.

நண்பன்: சரி சார் (விதியை நொந்து கொண்டு). அடுத்த தடவை வரும் பொழுது சரியா கொண்டு வரேன் (எப்படி என்று தெரியாமல்).

------------------------------------------------------------------------------------------------------

இந்த நிகழ்ச்சியை என் நண்பன் சொல்லும் பொழுது என்னுள் எழுந்த சில கேள்விகள்,

1. சாதரண மக்களுக்கு பத்திரிக்கை மூலம் புதிய விதிகளை அறிவிக்கும் இந்திய இரயில்வே, தங்களின் ஊழியர்களுக்கு இதை அறிவிக்காமலா இருக்கும் ?

2. டிக்கெட்டிலேயே விதிகள் பட்டியலிட்டு காட்டியும் TTE சில நேரங்களில் ஒத்துக் கொள்ளாதது ஏன் ?

3. பிரயாணிகளிடம் சில TTEகள் கனிவாக பேசாதது ஏன் ?

4. விதிகளை சொல்லிக் கொடுக்க வேண்டியவரே, விதிகளை தெரிந்து கொள்ளாமல் இருப்பது ஏன் ?

Tuesday, November 11, 2008

சிவப்பு விளக்கு : Danger Light

சாலையில் பயணித்துக்கொண்டிருக்கும் பொழுது மிக இயல்பாக நாம் கவனிக்கும் விசயம் முன் செல்லும் வண்டிகளில் அவர்கள் ப்ரேக் போடும் பொழுது எரியும் சிவப்பு விளக்குகள். நமது வண்டியின் வேகத்தை குறைக்க சொல்லி அந்த சிவப்பு விளக்குகள் அறிவுருத்துகின்றன. இந்த விளக்குகள் சரியான முறையில் வேலை செய்யாவிடில் போக்குவரத்துக் காவலர்களுக்கு அபராதம் விதிக்க உரிமை உண்டு.

patient_bus

ஆனால், இந்த சென்னை மாநகரின் போக்குவரத்தின் முக்கிய பங்காக அமையும் நமது அரசு பேருந்துகள் இந்த விளக்குகளை சரியான முறையில் இயங்காத வண்ணம் பேருந்துகளை பராமறிக்கின்றன. அதனால் அதன் பின் செல்லும் வாகனங்கள், அரசு பேருந்துகள் எந்த நேரத்தில் நிற்க்கும், எந்த நேரத்தில் ப்ரேக் போடும் என்று தெரியாமல் தங்கள் உயிரை பணயம் வைத்து பிரயாணிக்க வேண்டி உள்ளது. இதை காவலர்கள் கண்டும் காணாமல் இருப்பது வேதனைக்குரியது.

இது சிறு குறை என்றாலும் இதனால் ஏற்படும் இழப்புகளோ ஈடு செய்ய முடியாதவை. கண்டு கொள்ளுமா தமிழ்நாடு பேருந்து கழகம். ????

Monday, October 20, 2008

என்று தணியும் இந்த மின்சார தாகம்...

 

                              Electric_transmission_lines.resize

அந்த் செய்தியை கேட்டு மிகவும் மனம் நொந்து போனேன்.

600 யுனிட்டுக்கு மேல் மின்சாரம் உபயோகித்தால் 50% அதிகமாக மின்சார கட்டணம் செலுத்த வேண்டுமாம். 600 யுனிட் என்பது ஒரு வீட்டிற்கு மிகவும் அதிகமான பயன்பாடுதான் ஆனால் அதற்கு 50% அபராதம் என்பது மிக மிக அதிகமான அபராத தொகையாகும்.

இப்படி பட்ட அபராதத்தை விதிக்கும் முன் நமது முதல்வர் சிறிது நேரம் யோசிக்க வேண்டாமா ? அல்லது மின்சாரத்தை சிக்கனமாக பயன் படுத்துவதற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டாமா ?

அவர் தலைமை தாங்கும் விழாக்களுக்கு செலவாகும் மின்சாரத்தை சேமித்தாலே ஒரு சிறிய தொழிற்சாலைக்கு ஒரு நாளூக்கு தேவையான மின்சாரத்தை எடுத்துவிடலாம்.

சென்னையில் எதனையோ மேம்பாலங்கள் கட்டபடுகின்றன, அதற்கெல்லாம் இரவில் திறப்பு விழா வைப்பதைவிட பகலில் வைக்கலாமே ?

திறப்பு விழாக்கள் வைக்காமல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

அதே போல் இந்த மாதிரி பொது விழாக்களுக்கு செலவாகும் அதிகபடியான மின்சாரத்திற்கு அபராதம் விதிக்கலாமே.

நமது முதல்வரோ, மின்சார அமைச்சரோ இதைப் பற்றி கொஞ்சம் சிந்திப்பார்களா ???

Sunday, October 19, 2008

நல்ல கூட்டணி.. (NHM Writer + Windows Writer)

 

                            WLiveWriter

வலைப்பூ நண்பர்களுக்கு...

வலைப்பதிவு எழுதுவதை உற்சாக படுத்தும் விதமாக Microsoft ஒரு சிறந்த தொகுப்பை தன் Windows Live-ல் அறிமுக படுத்தியுள்ளது. அது தான் Windows Writer.

இதை பதிவிறக்கம் செய்ய - Windows Live Package

Windows Writer-ல் உங்கள் ப்ளாக்-ல் உள்ளது போல் அனைத்து வசதிகளும் இருக்கிறது. இதன் மூலம் நிங்கள் நேரடியாக உங்கள் பதிப்பை இணையத்தில் போட முடியும்.

அப்போ இந்த NHM Writer எதுக்கு ?

Windows Writer தொகுப்பை ஆங்கிலம் எழுத மட்டுமே பயன்படுத்த முடியும். NHM Writer தொகுப்பானது Microsoft Office-ல் தமிழில் எழுத பயன் படுத்தபடும் ஒரு மென்பொருளாகும். இதில் 5 வகையான தமிழ் எழுத்துருக்களை பயன் படுத்தமுடியும்.

இந்த மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவும் பொழுது, உங்களால் Windows Writer-ல் தமிழில் எழுத முடியும்.

NHM Writer பதிவிறக்கம் செய்ய - NHM Writer

Monday, October 6, 2008

எதாச்சும் செய்யணும் சார்..



சமிபத்தில் சன் டிவி யில் சிவப்பதிகாரம் படம் பார்க்க நேர்ந்தது. அந்த படத்தின் முடிவாக ஒரு கேள்வி ரசிகர்களாகிய நம்மிடம் கேட்க படும். அது தேர்தலில் நிற்க என்ன தகுதி வேண்டும் என்பதுதான்.

தற்போது தேர்தலில் நிற்க வயது மட்டுமே ஒரு தகுதியாக கருத படுகிறது என்று அந்த படத்தில் வரும் கதாநாயகன் சொல்வார். தேர்தலில் நிற்க வயது சரியாக இருந்தால் மட்டும் போதுமா ??? (அவரின் மீது எந்த விதமான கிரிமினல் கேஸ்கள் இருக்க கூடாது என்றும் ஒரு சட்டம் இருக்கிறது.)

இந்த தகுதிகள் மட்டும் ஒரு மக்கள் பிரதிநிதிக்கு போதுமா எனபதே என் கேள்வி ? அந்த படத்தில் சொல்வது போல் சில சட்டங்களை ஏன் கொண்டு வரமுடியாது ???

அந்த படத்தில் சொல்லப்படும், நடை முறை சிக்கல் இல்லாத சில வழிகள் என நான் கருதுபவை

  • ஒவ்வொரு தேர்தல் வாக்கு சீட்டிலும் அசோக சக்கரத்தை ஒரு பொது சின்னமாக வைக்க வேண்டும். அந்த சின்னத்திற்கு அதிக வாக்குகள் விழுந்தால், அந்த மாவட்டத்தின் கலெக்டர் அவர்களே மக்கள் பிரதிநிதியாக தேர்தெடுக்க பட வேண்டும்.
  • MLA ஆகா வேண்டும் என்றால், இரண்டு முறை நகராச்சி தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வேண்டும், இரண்டு முறை MLA ஆக இருந்தால் மந்திரி ஆகலாம். இரண்டு முறை மந்திரி ஆக இருந்தால் மட்டுமே முதல் மந்திரி ஆக தகுதி பெறுவார்
  • ஒருவர் இரண்டு முறைக்கு மேல் முதல் மந்திரி ஆக முடியாது
  • தேர்தலில் நிற்க TNPSC தேர்வில் நல்ல மதிப்பேன் எடுக்க வேண்டும்
  • ஒட்டு போடுவதை கட்டாயமாக்குதல்

இப்படி போன்ற நல்ல சட்டங்களை நம்மால் வெகு சுலபமாக கொண்டு வர முடியும். ஆனால் நமது அரியணையில் இருப்பவர்கள் தம்மை பாதிப்பது போன்ற எந்த ஒரு சட்டத்தையும் இயற்ற மாட்டார்கள்.

இது போன்ற சட்டங்களை கொண்டு வர நாம எதாச்சும் செய்யனும் சார்...

பி.கு

நடைமுறை படுத்தக்கூடிய நல்ல தேர்தல் விதிமுறைகளை உங்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்

இது போன்ற சட்டங்கள் நடைமுறை படுத்தபட்டால், வடிவேல் போன்றவர்கள் தங்கள் தனிமனிதவிருப்பு வெறுப்புகளுக்கு எல்லாம் தேர்தலில் நின்று ஜெய்பேன் என்று சபதம் விட முடியாதல்லவா ???

Saturday, September 20, 2008

எல்லாந்தழுவியவர்களாக நாம் ஆக வேண்டும் - ஸ்ரீ அரவிந்தர்!




நமது வழி பூரணத்தை அடையும் வழியாக இருக்கட்டும், விட்டுவிட்டு ஓடிவிடும் வழியாக இருக்க வேண்டாம்; போரில் வெற்றி பெறுதல் நமது நோக்கமாக இருக்கட்டும், எல்லாப் போராட்டத்திலிருந்தும் தப்பிச் செல்லுதலாக இருக்க வேண்டாம். 

யோகத்தின் மூலம் நாம் பொய்மையிலிருந்து உண்மைக்கும், பலவீனத்திலிருந்து சக்திக்கும், துன்பம் துயரத்திலிருந்து பேரின்பத்திற்கும், அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரத்திற்கும், மரணத்திலிருந்து அமர நிலைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும், குழப்பத்திலிருந்து தெளிவிற்கும், அபூரணத்திலிருந்து பூரணத்திற்கும், பிரிவிலிருந்து ஐக்கியத்திற்கும் உயராம். 

இறைவன் எப்படிப் பூரணனாக இருக்கிறானோ அப்படியே நாமும் பூரணமடைதல், அவன் எப்படித் தூயோனாக இருக்கிறானோ அப்படியே நாமும் தூய்மையாதல், அவன் எப்படி ஆனந்தமயமாக இருக்கிறானோ அப்படியே நாமும் ஆனந்தமயமாதல்; அதன்மேல், நாம் பூரணயோகச் சித்தர்கள் ஆனபோது மனித இனம் முழுவதுமே அந்த நிலையை அடையும்படி செய்தல் - இதுவே நமது குறிக்கோள் ஆகும். 

இப்பொழுது நாம் நமது இலட்சிய நிலைக்குக் குறைந்தவர்களாக இருந்தபோதிலும், அந்த முயற்சிக்கு நம்மை முழுமனதோடு கொடுத்துவிட்டால், எப்பொழுதும் அந்தக் குறிக்கோளுடனேயே, அதற்காகவே வாழ்ந்து அந்தப் பாதையில் இரண்டு அங்குலம் முன் சென்றால் அது போதும். அதுகூட மனித இனம் அது இப்போது வாழும் போராட்ட நிலையிலும் மங்கல் ஒளியிலிருந்து இறைவன் நமக்காகத் திட்டமிட்டுள்ள ஒளி பொருந்திய இன்ப நிலைக்கு அதனை இட்டுச்செல்ல உதவும். ஆனால் நமது உடனடி வெற்றி எதுவாக இருந்தபோதிலும் பிரயாணம் முழுவதையும் முடிப்பதே நமது மாறாத குறிக்கோளாக இருக்க வேண்டும், போகும் பாதையிலுள்ள அரைகுறையான ஓய்விடத்தில் திருப்தியோடு படுத்துவிடக்கூடாது. 

உலகிலிருந்து முற்றிலுமாக நம்மை விலக்கிக்கொண்டு போகும் எல்லா யோகமும் தெய்வீகத் தவத்தின் உயர்வான, ஆனால் குறுகிய தனித்துறை வளர்ச்சியாகும். பூரணனாகிய இறைவன் தனது பூரணத்தில் எல்லவற்றையும் அனைத்துக்கொள்கிறான்; நாமும் எல்லாந்தழுவியவர்களாக ஆகவேண்டும்.

Tuesday, August 26, 2008

உன் எதிர்காலம் உன் கையில்! சுவாமி விவேகானந்தர்



சுவாமி விவேகானந்தர் கூறியவைகளை, உன் எதிர்காலம் உன் கையில் என்ற புத்தகமாகத் தொகுத்து ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ளது.

நமது நோக்கம்

இயைபுடன் முன்னேறிய மனிதனைப் பார்க்கவே நாம் விரும்புகிறோம்.

அவன் விசாலமான இதயம், பரந்த மனம், உயர்ந்த செயல் இவற்றைப் படைத்திருக்க வேண்டும்.

உலகத்தின் துயரையும் துன்பத்தையும் தீவிரமாக உணரும் இதயம் படைத்தவனே நமக்குத் தேவை. அத்துடன் நிற்காமல், அந்த உணர்ச்சியையும் அறிவையும் செயலாக்குபவனே நமக்கு மிகவும் வேண்டப்படுபவன்.

மூளை, இதயம், செயல் இவை ஒருங்கிணைந்து செயல்படுவதே தேவை.

நம்மை மேம்படுத்துவதன் முக்கியத்துவம்

நம்மைச் சுற்றி நடப்பதை நீங்கள் காண்கிறீர்கள். அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக உள்ளது உலகம். நமது சக்தியில் ஒரு பாகம் நமது சொந்த உடலைப் பாதுகாப்பதற்குச் செலவாகிறது. இதைத் தவிர ஒவ்வொரு சிறு பகுதியும் அல்லும் பகலும் பிறர்மீது ஆதிக்கம் செலுத்தவே பயன்படுகின்றன.

நமது உடல்கள், நமது குணங்கள், நமது அறிவு, நமது ஆன்மீகம் எல்லாமே இடைவிடாமல் பிறர் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. அதைப் போல் நாமும் அவற்றின் ஆதிக்கத்திற்கு உள்ளாகி வருகிறோம். இது நம்மைச் சுற்றி எஙகும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இப்போது உதாரணம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். ஒருவர் வருகிறார். அவர் நன்கு கற்றவர் என்பது உங்களுக்குத் தெரியும். அவரது மொழி நடை அழகாக உள்ளத. அவர் ஒரு மணி நேரம் உங்களுடன் பேசுகிறார். ஆனால் சொன்னதில் பெரிதாக எதுவும் உங்கள் மனதில் பதியவில்லை.

இன்னொருவர் வருகிறார். ஒரு சில வார்த்தைகளே பேசுகிறார். அவை நன்றாக ஒழுங்குப்படுத்தப்படவும் இல்லை. ஒரு வேளை இலக்கணப் பிழைகளும் அதில் காணப்படும். ஆனால் அவர் சொன்னது பேரளவிற்கு உங்கள் மனதை ஆக்கிரமிக்கிறது.

உங்களுக்குள் பலரும் இதை அனுபவித்திருப்பீர்கள். எனவே ஒரு போதும் வார்த்தைகள் மட்டுமே மனத்தின் பதிவை உண்டாக்கி விடுவதில்லை..

என்பது வெளிப்படை. வார்த்தைகள், ஏன், எண்ணங்கள் கூட ஒரு பதிவை உண்டு பண்ணுவதற்கு மூன்றிலொரு பங்கு சக்தியை மட்டுமே அளிக்கின்றன, மனிதனே மற்ற இரண்டு பங்கை அளிக்கிறான். மனிதனின் கவரும் ஆற்றல் என்று நீங்கள் குறிப்பிடுகின்ற அந்தச் சக்தியே வெளியேறி உங்களிடம் பதிவை உண்டாக்குகிறது.

நமது குடும்பங்களில் தலைவர்கள் உள்ளனர். அவர்களுள் சிலர் வெற்றி பெறுகின்றனர். சிலர் பெறுவதில்லை. ஏன்? நாம் தோல்வியுறும்போது பிறரைக் குறை கூறுகிறோம். நாம் வெற்றி பெறாத அந்தக் கணமே, நமது தோல்விக்குக் காரணம் இவர்தான் என்று ஒருவரைக் காட்டிவிடுகிறோம்.

தோல்வியுறுகின்ற யாரும் தனது சொந்தக் குற்றங்களையும் பலவீனங்களையும் ஒப்புக் கொள்ள விரும்புவதில்லை. தன்னைக் குற்றம் அற்றவனாகக் கருதவும், குற்றத்தைப் பிறர் மீதோ, பிற பொருளின் மீதோ, ஏன் துரதிர்ஷ்டத்தின் மீதாவது சுமத்தவுமே ஒவ்வொருவனும் முயல்கிறான். குடும்பத் தலைவர்கள் தவறும்போது, சிலர் குடும்பத்தை நன்றாக நடத்துவதற்கும் பிறர் அவ்வாறு நடத்தாததற்கும் காரணம் என்ன என்பதைத் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். வேறுபாட்டிற்குக் காரணம் மனிதனே, அவனது குணச்சிறப்பே, அவனது ஆளுமையே என்பதை அப்போது காண்பீர்கள்.

மனிதகுலத்தின் பெரிய தலைவர்களைக் கவனித்தால், அவர்களின் ஆளுமையே அவர்களைத் தலைவர்கள் ஆக்கியது என்பதையே எப்போதும் காண்போம். கடந்த காலத்தின் எல்லா நூலாசிரியர்களையும் சிந்தனையாளர்களையும் எண்ணிப் பார்ப்போம்.

உண்மையைச் சொல்வதானால், அப்படி எத்தனை எண்ணங்களைத்தான் அவர்கள் எண்ணிவிட்டார்கள்? கடந்த காலத்திலிருந்து மக்கள் குலத் தலைவர்கள் நமக்கு விட்டுச் சென்ற நூல்கள் அனைத்தையும் பாருங்கள்.

அவர்கள் எழுதிய புத்தகங்கள் ஒவ்வொன்றையும் மதிப்பிடுங்கள். இன்று வரை உலகில் நினைக்கப்பட்டுள்ள, புதிய, சொந்தமான உண்மைக் கருத்துக்கள் கையளவு மட்டுமே. அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற எண்ணங்களை அவர்களுடைய நூல்களில் படியுங்கள். அந்த நூலாசிரியர்கள் நமக்கு மாபெரும் மக்களெனத் தோன்றுவதில்லை. எனினும் அவர்கள் தங்கள் காலங்களில் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம்.

அவர்களை அவ்வாறு ஆக்கியது எது?

அவர்கள் சிந்தித்த எண்ணங்களோ, அவர்கள் எழுதிய நூல்களோ, அவர்கள் செய்த சொற்பொழிவுகளோ மட்டும் அல்ல, அப்போது இருந்து, இப்போது மறைந்துவீட்ட வேறு ஏதே ஒன்று, அதாவத, அவர்களது ஆளுமை. நான் முன்பு கூறியது போல், அவர்களின் ஆளுமை மூன்றில் இரண்டு பங்கு, அவர்களின் அறிவும் வார்த்தைகளும் ஒரு பங்கு. உண்மை மனிதன் அதாவது அவர்களின் ஆளுமையே நம்மை ஆக்கிரமிக்கிறது. நம் செயல்கள் விளைவுகள் மட்டுமே. மனிதன் உள்ளபோது செயல்கள் வந்தேயாக வேண்டும். விளைவு, காரணத்தைப் பின் தொடர்ந்தே தீரும்.

கல்வி, பயிற்சி இவை அனைத்தின் லட்சியமும் இந்த மனிதனை உருவாக்குவதாகவே இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக நாம் வெறும் மேற்பூச்சு பூசி அழகுபடுத்த முயன்று வருகிறோம். அகத்தே ஒன்றும் இல்லாத போது புறத்தை அழகுபடுத்துவதால் என்ன பயன்? எல்லா பயிற்சிகளின் பயனும் நோக்கமும் மனிதனை வளரச் செய்வதே. தன் சகோதர மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன், அவர்கள் மீது மாய வலையை வீசியது போன்று அவர்களைக் கவர்பவன் ஆற்றலின் ஒரு சுரங்கமாகிறான். அத்தகையவன் தயாராகும்போது, விரும்புகின்ற எதையும் அவனால் செய்ய முடியும். அவனது ஆளுமையின் ஆதிக்கம், எதன் மீது செலுத்தப்பட்டாலும் அதனைச் செயல்பட வல்லது ஆக்கும்.

நன்றி : ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை - 4.

Sunday, August 24, 2008

ராபின் ஷர்மா





ராபின் ஷர்மாவின் மெகா லிவிங் புத்தகத்திலிருந்து....

  • சாதிபவர்கள் சிலர், அதை வேடிக்கை பார்பவர்கள் பலர். என்ன நடந்தது? என்று கேட்டு தெரிந்து கொள்வார்கள் அறிவிலர்.
  • நீங்கள் சிலரா ? பலரா ? (அறிவிலரா என்று யோசிக்கவே யோசிக்காதிர்கள்)
  • இறந்த காலத்தின் வாட்ச் மேன்.. எதிர் காலத்தின் Engineer . நீங்கள் வாட்ச் மேனா engineer- ஆ
  • வெற்றியாளர்கள் தாங்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை அவர்களே தீர்மானிக்கும் வல்லமை உள்ளவர்களாக இருப்பார்கள்.
  • எந்த ஒரு பிரச்சனையும் ஆனந்தமாக அனுபவித்து தீர்வு காணுங்கள். ஒவ்வொரு சவாலும் அடுத்த சாதனைக்கான சாவி என்பதை மறக்க வேண்டாம்
  • உங்களையே நீங்கள் வெற்றி கொள்ள வேண்டும். உங்களுக்கும் இருக்கும் வெற்றிதான் உங்களை சுற்றியும் பிரதிபலிக்கும்
  • உங்கள் விருபங்களுக்கு எஜமானாக இருங்கள். உங்கள் மனசாட்சிக்கு பணியாளாக இருங்கள்.
  • இன்று நிறைவாக செயல் படுபவர்கள், நாளை நிறையவே மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
  • நாம் சந்தோசமாக இருப்பதால் சிரிப்பதில்லை, சிரிக்கவே சந்தோசமாக இருக்கிறோம்.

நட்பு



வானத்தின் சொந்தங்கள் வின் மீன்கள்
மலரின் சொந்தங்கள் வண்டுகள்...
காற்றின் சொந்தங்கள் தென்றல்...
நட்பின் சொந்தங்கள்
நல்ல நினைவுகள்...!!!

Saturday, August 23, 2008

அவள்...




அவளை நினைத்தேன்...
கவிதையும் வரவில்லை..
தூக்கமும் வரவில்லை...

Thursday, July 24, 2008

இனிமையான நிமிடங்கள்...



வாழ்கையில் சிறந்த சில நிமிடங்கள்

  1. முதல் மாத சம்பளத்தை பத்திரமாக பெற்றோரிடம் கொடுக்கும் அந்த நிமிடம்
  2. தோற்ற காதலையும், காதலியையும் எண்ணி கண் கலங்கும் சில நிமிடம்
  3. பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும் புகை படங்களை பார்த்து சிரிக்கும் நிமிடங்கள்
  4. என்றும் பசுமையான நமது பள்ளி மற்றும் கல்லூரி கனா காலங்களை நினைவு கூறும் நிமிடங்கள்
  5. நண்பர்களுடன், நம்மை மறந்து கலந்துரையாடும் இனிய நிமிடங்கள்
  6. நாம் வேண்டும் பொழுது பழைய துணிகளில் கிடைக்கும் சில ரூபாய் நோட்டுகள்
  7. காதலியின் கை கோர்த்து நடக்கும் நிமிடங்கள்
  8. நம் நலன் கருதும் நண்பரிடமிருந்து கிடைக்கும் சின்ன கட்டிபுடி வைத்யம்
  9. தன்னுடைய முதல் குழந்தைக்கு கொடுக்கும் முதல் முத்தம்
  10. மனம் விட்டு சிரிக்கும் பொழுது கண்களில் ஒரம் தோன்றும் கண்ணீர் துளி.
  11. தினமும் பார்க்கும் விஷயங்களை, திடீரென்று ரசித்து பார்க்கும் அந்த நிமிடம் !!!

Wednesday, July 9, 2008

அறிவியலாளர்கள்

அலெக்சாண்டர் கிரகாம் பெல்



அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 - ஆகஸ்ட் 2, 1922) ஓர் ஆசிரியராகவும், அறிவியல் அறிஞராகவும் அறியப்படுகிறார். இவரதுதாயாரும் மனைவியும் செவிடராதலினால் இவரது ஆய்விற்கு இது ஓர்உந்துசக்தியாக அமைந்திருக்கலாம். இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம் ஆண்டுதொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின்நிறுவனரும் ஆவார். அலெக்சாண்டர் பெல் எடின்பேர்க், ஸ்கொட்லாந்தில் 3 மார்ச் 1847 ஆம் ஆண்டு பிறந்தார்

அல்பர்ட் ஐன்ஸ்டீன்

அல்பர்ட் ஐன்ஸ்டீன் ( Albert Einstein, மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை ( Relativity theory) முன்வைத்ததுடன், குவாண்டம் பொறிமுறை (quantum mechanics), புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் ( Photo electric effect ) கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் ( Theoretical physics ) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டீன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999 ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட ரைம் ( இதழ் ), "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.

உபயம்: விக்கிபீடியா

2. நான் மாட கூடல் எனும் மதுரை

இந்தியாவில் உள்ள மிக பெரிய கோவில்களுள் ஒன்று மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவில். இது குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டது. ஆனால் அது இயற்கை சீற்றங்களால் சற்று அழிவுபெற்றது.

இப்போதுள்ள கோவில் விஸ்வநாத நாயகரால் வடிவம் பெற்று திருமலை நாயகரால் கட்ட பெற்றது. இந்த கோவிலை நான் மாடக்கூடல் என்று சொல்வர். நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்கள் இருப்பதால் இத்தளம் இப்பெயர் பெற்றது. நான்கு திசைகளிலும் கோபுரங்களை முதன்மையாக கொண்டு ஆடி, சித்திரை, மாசி மற்றும் வெளி வீதி என்று மதுரை அந்த காலத்திலே மிகவும் திட்டமிட்டு கட்டப்பட்டதாகும்.


மதுரை கோவிலில் சுமார் 3.3 கோடி சிற்பங்கள் உண்டு என்று கணகிடபட்டுள்ளது. இப்பொழுதுள்ள கோவில் திராவிட கலாச்சாரத்தை அடிபடையாக கொண்டு கட்டப்பட்டதாகும். இக்கோவிலில் இப்பொழுது 12 உள் கோபுரங்கள் மற்றும் 4
உயரமான கோபுரங்கள் உள்ளன. அதனுள் தெற்கு திசையில் உள்ள கோபுரம் மிகவும் உயரமானது. இது 49 மீட்டர் உயரம் உடையது.

இக்கோவிலுள்ள அஷ்ட ஷக்தி மண்டபத்தில் திருவிளையாடல் புராணமும், மீனாக்ஷி அம்மன் மதுரை இளவரசியாக இருந்த புராணமும் சிற்பங்களாக வடிக்க பட்டுள்ளன. பொற்றாமரை குளம் மீனாக்ஷி அம்மனின் இடது புறம் அமைந்துள்ளது. இந்த குளத்தில்தான் நம் முன்னோர்கள் தமிழ் செய்யுள்களை மதிப்பீடு செய்தனர்.

செய்யுள்கள் எழுதி முடித்த பின்னர் அவை இக்குளத்தில் போடப்படும். மூழ்கியபின் மேலே மிதக்கும் சுவடுகளை தமிழில் சிறந்தது என்று கருதுவர். உலக பொதுமறையாம் திருக்குறள் இவ்வாறு மதிப்பீடு செய்தது என்று ஒரு வரலாறும் இங்கு நிலவுகிறது.

கோவிலின் மேற்கில் ஊஞ்சல் மண்டபமும், கிளி கூட்டு மண்டபமும் அமைந்துள்ளன. கிளி கூட்டு மண்டப்பத்தில் கிளிகள் மீனாக்ஷி தாயின் பெயரை உட்சரித்து கொண்டிருக்கும். வெள்ளிதோறும் ஊஞ்சல் மண்டபத்தில் மீனாக்ஷி தேவியின் உற்சவ சிலையை வைத்து பூஜ்ஜிப்பர்.

இந்திரன் சொக்கநாதரை பூஜித்த கடம்ப மரத்தின் கன்று இக்கோவிலில் இப்பொழுது காணலாம். கோவிலின் வெளி புறத்தில் கம்பத்தடி மண்டபமும் வெள்ளி அம்பலமும் அமைந்துள்ளன. மீனாக்ஷி சுந்தரேஷ்வரரின் திருமண காட்சியை இந்த மண்டபத்தில் சிற்பமாக வடித்துள்ளனர். சிவபெருமான் நாட்டியமாடும் ஐந்து மண்டபங்களில் இந்த வெள்ளி அம்பலமும் ஒன்று. (மற்ற நான்கு மண்டபங்கள்: சிதம்பரம், திருவாலங்காடு, திருநெல்வேலி மற்றும் குற்றாலம்).

இங்கு உள்ள நடராஜர் சிலை மேலும் சிறப்பு பெற்றது. இங்குள்ள நடராஜர் சிலை
வலது காலை தூக்கி ஆடும் விதமாக அமைய பெற்றுள்ளதே இதன் சிறப்பு அம்சமாகும். மன்னன் ராஜசேகர பாண்டியனின் வேண்டுகோளுக்கிணங்க நடராஜர் இப்படி ஆடியதாக கூறப்படுகிறது. நடராஜர் சிலை வெள்ளியால் செய்ய பெற்றுள்ளதால் இதற்கு வெள்ளி அம்பலம் என்று பெயர் வந்தது.


இங்கு அமைந்துள்ள ஆயிரம் கால் மண்டபம் மேலும் சிறப்பு பெற்றதாகும். இது 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த மண்டபத்தின் வெளியில் இசை எழுப்பும் தூண்கள் அமயபெற்றுள்ளன. இதை தட்டும் பொழுது வெவ்வேறு விதமான இசைகளை எழுப்பும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இங்கு அமைத்துள்ள முக்குறுணி விநாயகர் சிலை, கோவிலுக்கு மூன்று கிலோ மீட்டர் தொலைவில், திருமலை நாயகர் கோவிலுக்காக குளம் வெட்டுகையில் தோண்டி எடுக்க பட்டது. இன்றும் இக்குளம் தெப்பகுளம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

இக்குளத்திற்கு என்று தனியாக விழாவும் நடக்கிறது. நான் மாட கூடலில் நாம் வியக்கும் வகையில் மேலும் சிறப்புகள் ஏராளமாக உள்ளன. அதை தொகுத்து அடுத்த பதிவில் வழங்குகிறேன்.

நன்றி

தொடரும்...