Tuesday, November 11, 2008

சிவப்பு விளக்கு : Danger Light

சாலையில் பயணித்துக்கொண்டிருக்கும் பொழுது மிக இயல்பாக நாம் கவனிக்கும் விசயம் முன் செல்லும் வண்டிகளில் அவர்கள் ப்ரேக் போடும் பொழுது எரியும் சிவப்பு விளக்குகள். நமது வண்டியின் வேகத்தை குறைக்க சொல்லி அந்த சிவப்பு விளக்குகள் அறிவுருத்துகின்றன. இந்த விளக்குகள் சரியான முறையில் வேலை செய்யாவிடில் போக்குவரத்துக் காவலர்களுக்கு அபராதம் விதிக்க உரிமை உண்டு.

patient_bus

ஆனால், இந்த சென்னை மாநகரின் போக்குவரத்தின் முக்கிய பங்காக அமையும் நமது அரசு பேருந்துகள் இந்த விளக்குகளை சரியான முறையில் இயங்காத வண்ணம் பேருந்துகளை பராமறிக்கின்றன. அதனால் அதன் பின் செல்லும் வாகனங்கள், அரசு பேருந்துகள் எந்த நேரத்தில் நிற்க்கும், எந்த நேரத்தில் ப்ரேக் போடும் என்று தெரியாமல் தங்கள் உயிரை பணயம் வைத்து பிரயாணிக்க வேண்டி உள்ளது. இதை காவலர்கள் கண்டும் காணாமல் இருப்பது வேதனைக்குரியது.

இது சிறு குறை என்றாலும் இதனால் ஏற்படும் இழப்புகளோ ஈடு செய்ய முடியாதவை. கண்டு கொள்ளுமா தமிழ்நாடு பேருந்து கழகம். ????

1 comment: