Wednesday, June 23, 2010

வெண்ணிலா கபடிக்குழு…

Vennila-Kabadi-kuzhu-006

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இடம் பெற்ற இந்த பாடலும் பாடலின் வரிகளும் கேட்பதற்கு இனிமையாகவும்.. மனதை லேசாக்கவும் செய்கிறது... இதோ அந்த பாடல் வரிகள்...கேட்டுப்பாருங்கள் கண்டிப்பாக பிடிக்கும்…

உயிரில் ஏதோ வலிகள் தோன்றும்
என் விழிகள் ஓடி அவள் முகமே தேடும்
பூக்காலம் அருகில் பார்த்தேன்
கார்காலம் பிரிவில் பார்த்தேன்
ஏராளம் நினைவுகள் தீ மூட்டுதே
என்னுள்ளே கனவுகள் போர் மூட்டுதே…


உயிரில் ஏதோ வலிகள் தோன்றும்
என் விழிகள் ஓடி அவள் முகமே தேடும்…

பார்த்துப் பழகிய பொழுதுகள் மனதில் விரியுதே
அதை இன்று எதிரினில் நின்றுதான்
நகர்ந்திட மறுக்குதே
மஞ்சளின் கரைகளாக
என் நெஞ்சிலே கலந்துப்போனால்
வானவில் நிறங்களாக
கண் பார்க்கும் முன் மறைந்துப்போனால்…


காலம் பிரித்தாலும் எந்தன் காதல் பிரியாதே
மேகம் கலைந்தாலும் மீண்டும் தோன்றும் அழியாதே
காலம் பிரித்தாலும் எந்தன் காதல் பிரியாதே
மேகம் கலைந்தாலும் மீண்டும் தோன்றும் அழியாதே

உயிரில் ஏதோ......என் விழிகள் ஓடி அவள் முகமே தேடும்
பூக்காலம் அருகில் பார்த்தேன்
கார்காலம் பிரிவில் பார்த்தேன்
ஏராளம் நினைவுகள் தீ மூட்டுதே
என்னுள்ளே கனவுகள் போர் மூட்டுதே

No comments:

Post a Comment