Sunday, January 3, 2010

எங்கள் ஊர் திருவிழா…




எங்கள் ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி. பெருமையா சொல்லிக்கணும்னா திரு. கமல்ஹாசனின் சொந்த ஊர். மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டுதோரும் சிறப்பாக நடைபெறுவது அனைவரும் அறிந்ததே. எங்கள் ஊரும் வைகை ஆற்றுப்படுகையில் இருப்பதாலும், வைகை ஆற்றங்கரையில் பெருமாள் கோவில் இருப்பதாலும் அந்த வைபவம் இங்கும் ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும். மதுரையம்பதி நகரம் ஆகி விட்டதால், சில நடைமுறை சிக்கல்களால் அவர்கள் செய்யாமல் விடும் சுவாரிசியமான சில சம்பிரதாயங்களை எங்கள் ஊர் திருவிழாவில் காண முடியும். அதில் முக்கியமானது, பெருமாள் கோவிலை விட்டு வெளியேரும் காட்சி. அதை சொற்களால் வர்ணிக்க இயலாது. அதனால் அந்த video-வை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். கண்டு மகிழுங்கள்… ஆடி வரார், ஓடி வரார், அழகழகாய் நடந்து வரார்…

2 comments:

  1. இதுவரை நேரில் கண்டிராத நான், வீடியோவில் கண்டு மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete