Monday, April 13, 2009

49 O என்னும் பிரம்மாஸ்திரம்...

ballot_box_2

கடந்த மூன்று வாரங்களாக திரு.  ஞானி அவர்கள், தன்னுடய ஓ பக்கங்களில் வலியுறுத்தி வரும் 49 ஓ என்னும் வேட்பாளர் நிராகரிப்பு ஓட்டை வாக்கு சாவடிகளில் எப்படி பதிவு வேண்டும் என்பதைப் பற்றிய பதிவு.

”வாக்குச் சாவடிக்குச் சென்றதும் நம் பெயர் பட்டியலில் இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு, வாக்குச் சாவடி அதிகாரி, நம்மிடம் ஒரு நோட்டில் கையெழுத்து வாங்குவார். பிறகு அடுத்த அதிகாரி நம் விரலில் மை வைப்பார். மை வைத்த உடன், நாம் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை; 49 ஓ பதிவு செய்ய விரும்புகிறேன் என்று சொல்லவேண்டும். உடனே முதலில் நாம் கையெழுத்திட்ட அதே  நோட்டில், அந்தக் கையெழுத்தின்  பக்கத்திலேயே 49 ஓ என்று எழுதி இன்னொரு முறை நாம் கையெழுத்திட வேண்டும். இதுதான் 49 ஓவைப் பதிவு செய்யும் முறை.

இதைச் செய்யக் கூடாது என்று நம்மை யாரும் & சாவடி அதிகாரி முதல் கட்சிப் பிரதிநிதிகள் வரை தடுக்க முடியாது. அதற்கு அவர்கள் யாருக்கும் உரிமை இல்லை. தடுத்தால் போலீசை அழைக்கலாம். நரேஷ் குப்தாவுக்கு அங்கிருந்தே ஃபோன் செய்யலாம்.

தனியே போய் சாவடியில் பகிரங்கமாக 49 ஓ பதிவு செய்ய தயக்கமாக இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் வாக்குச் சாவடியில் 49ஓ பதிவு செய்ய விரும்பும் இதர நண்பர்கள் சேர்ந்து ஒரு இடத்தில் சந்தித்து ஒன்றாகப் போய் வரிசையில் நின்று 49 ஓ பதிவு செய்யுங்கள்.”

தேர்தலில் நிற்க்கும் வேட்பாளர்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், தயவு செய்து வீட்டிலேயே முடங்கி இருக்காமல், தவறாமல் 49 ஓ பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மிக்க நன்றி - திரு.  ஞானி அவர்கள் அவர்களுக்கு.

இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள

http://www.gnani.net/

2 comments:

  1. ராஜ நடராஜன்April 13, 2009 at 8:30 PM

    இங்கேயாவது ஒரு 49 ஓ போட்டுக்கிறேன்!

    ReplyDelete
  2. O podadhe.. Ottu podu.

    http://ullal.blogspot.com/
    -aathirai

    ReplyDelete