Tuesday, July 8, 2008

SMS கவிதைகள்



எதாவது புதுசா எழுதலாம்னு யோசிச்சுக்கிடுருந்தப்போ, என்னோட செல் பேசிக்கு வந்த கவிதைகளை மொத்தம்மா தொகுத்து போடலாம்னு தோனுச்சு (சொந்த சரக்கு இல்லன இப்படி எல்லாம் தோணும்னு யாரோ சொல்றது காதுல விழுகுது).

இதோ SMS-ல் சுட்ட கவிதைகள் உங்கள் பார்வைக்கு...

விரும்பும் நெஞ்சம்
அருகில் இருந்தாலென்ன
தொலைவில் இருந்தாலென்ன
தொலையாத நினைவுகள் உள்ளவரை
தொலைவும் மிக அருகில் தான்

கருவறையை விட்டு
கீழே இறங்கி
கல்லறையை நோக்கி
நடந்து செல்லும் தூரம்தான்
வாழ்க்கை

அடி பெண்ணே
குப்பை தொட்டியும்
என்னை காதலித்திருக்கும்
நீ கிழித்துப் போட்ட
என் கவிதைகளை அது படித்திருந்தால்

பிரிந்து செல்பவர்கள்
மனதை புரிந்து கொள்வதில்லை
மனதை புரிந்து கொண்டவர்கள்
பிரிந்து செல்வது இல்லை

2 comments:

  1. Nalla Kavidhaigal..
    Athai Varaverpom..
    Valga tamizh

    ReplyDelete
  2. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
    தொடர்ந்து பின்னூட்டம் இடவும்

    ReplyDelete