Monday, October 20, 2008

என்று தணியும் இந்த மின்சார தாகம்...

 

                              Electric_transmission_lines.resize

அந்த் செய்தியை கேட்டு மிகவும் மனம் நொந்து போனேன்.

600 யுனிட்டுக்கு மேல் மின்சாரம் உபயோகித்தால் 50% அதிகமாக மின்சார கட்டணம் செலுத்த வேண்டுமாம். 600 யுனிட் என்பது ஒரு வீட்டிற்கு மிகவும் அதிகமான பயன்பாடுதான் ஆனால் அதற்கு 50% அபராதம் என்பது மிக மிக அதிகமான அபராத தொகையாகும்.

இப்படி பட்ட அபராதத்தை விதிக்கும் முன் நமது முதல்வர் சிறிது நேரம் யோசிக்க வேண்டாமா ? அல்லது மின்சாரத்தை சிக்கனமாக பயன் படுத்துவதற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டாமா ?

அவர் தலைமை தாங்கும் விழாக்களுக்கு செலவாகும் மின்சாரத்தை சேமித்தாலே ஒரு சிறிய தொழிற்சாலைக்கு ஒரு நாளூக்கு தேவையான மின்சாரத்தை எடுத்துவிடலாம்.

சென்னையில் எதனையோ மேம்பாலங்கள் கட்டபடுகின்றன, அதற்கெல்லாம் இரவில் திறப்பு விழா வைப்பதைவிட பகலில் வைக்கலாமே ?

திறப்பு விழாக்கள் வைக்காமல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

அதே போல் இந்த மாதிரி பொது விழாக்களுக்கு செலவாகும் அதிகபடியான மின்சாரத்திற்கு அபராதம் விதிக்கலாமே.

நமது முதல்வரோ, மின்சார அமைச்சரோ இதைப் பற்றி கொஞ்சம் சிந்திப்பார்களா ???

2 comments:

  1. 50% என்பது மிகவும் அதிகம்தான் நடுதர மக்களை இது அதிகம் பாதிக்கும்

    ReplyDelete
  2. I too read that news... Normal people going to suffer a lot. And also room current amount going to increase. :( :(

    ReplyDelete