காரணம் இல்லமால் கலைந்து போக
இது கனவு இல்லை
காரணம் சொல்லி பிரிந்து போக
இது காதல் இல்லை
உயிர் உள்ளவரை தொடரும்
உண்மையான நட்பு
காரணம் இல்லமால் கலைந்து போக
இது கனவு இல்லை
காரணம் சொல்லி பிரிந்து போக
இது காதல் இல்லை
உயிர் உள்ளவரை தொடரும்
உண்மையான நட்பு
”மென்பொருள் துறை சார்ந்து தமிழில் வெளியாகும் முதல் நாவல்” என்ற அடைப்புக்குள் இருக்கும் வார்த்தையை பார்த்தவுடன் இந்த நாவலில் அப்படி என்ன தான் நான் இருக்கும் துறையை பற்றி எழுத்தாளர் சொல்லியிருக்கிறார் என்று அறிந்து கொள்ள நினைத்தேன். பின்பு இந்த புத்தகத்தை பற்றி சக வலைப்பூ நண்பர்கள் அளித்த விமர்சனங்களை(எழுத்தாளரை திரு.சுஜாதா அவர்களின் வாரிசு என்று குறிப்பிட்டுருந்தது) படித்த பின் இந்த புத்தகத்தை படிக்க மேலும் ஆர்வம் அதிகரித்தது.
நேற்று இந்த புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பித்துவிட்டேன். வெகு சீக்கிரத்திலேயே படித்து முடித்து விடுவேன் என்று தோன்றுகிறது.
கூடிய விரைவில் இந்த புத்தகத்தை பற்றி எழுதுகிறேன்.
பொருளாதார மந்த நிலை காரணமாக சில அநாவசிய செலவுகளை தவிர்த்துக் கொண்டிருக்கும் இவ்வேளையிலும் நல்ல படங்களையும், எதிர் பார்ப்புகள் அதிகம் நிறைந்த படங்களையும் நான் சென்னை சத்யம் திரை அரங்கில் சென்று பார்ப்பதுண்டு. நல்ல படங்களை நல்ல சூழலில் நல்ல quality-ல் பார்க்க வேண்டும் என்ற காரணமேயாகும்.
சுஜாதா அவர்களின் கதை என்ற ஒரு காரணத்துக்காக சமீபத்தில் வெளியான ஆனந்த தாண்டவம் படத்தை பார்க்க சென்னை சத்யம் திரை அரங்கிற்க்கு சென்றேன்.
நான் மட்டும் அல்ல, அங்கு வந்திருந்த அனைவரும் அதே காரணத்திற்க்காக வந்திருந்தார்கள் என்பது புலப்பட்டது.
சரி படம் பத்தி சொல்லனும்னா, ஒரு நாவலை ஒரு பக்கம் விட்டு ஒரு பக்கம் படித்தது போன்ற உணர்வு. படம் நம்மை எங்கே கொண்டு செல்கிறது என்று கடைசி வரை புரியவில்லை.
ஹீரோவிற்கு எப்போது நடிப்பு வரும் என்று எதிர் பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.
படம் பார்த்து விட்டு திரும்பி வரும் போது என் மனசாட்சி சொன்னது “உன் வாழ்க்கையிலே நூறு ரூபாயும், மூன்று மணி நேரமும் இப்படி வேஸ்ட் பண்ணிடியேடா, பாவி !!!”