Tuesday, June 29, 2010

முரண்…

promethean-casket-pic-rex-121919246 

விளம்பரம்,
இறந்த உடலை வைக்க
குளிர்சாதன பெட்டி கிடைக்குமென்று,
தொலைபேசியில்
தொடர்பு கொண்ட போது
கிடைத்த முதல் வார்த்தை
வாழ்க வளமுடன்

Wednesday, June 23, 2010

5S - ஓரு ஜப்பானிய வழிமுறை

fives_b

சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் நான் முதலில் படிக்க எடுத்தது இந்த புத்தகத்தைத் தான். இந்த புத்தகம் ஜப்பான் நாட்டின் ராக்கேட் வேக வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கின்ற 5S வழிமுறையின் தொகுப்பு என்று சொல்லியவுடன் இந்த புத்தகத்தை வாங்கி விட்டேன். படிக்க மிக ஆர்வமாய் இருந்தது. இந்த வழிமுறையை இப்போது உலகெங்கும் பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர் என்பதும், இந்த வழிமுறையை நாம் நம் வீட்டிலும் பயன்படுத்தலாம் என்ற செய்தியும் என் ஆர்வத்தை மேலும் அதிகரித்து.

ஜப்பான் நாட்டினரிடம் மட்டும் அப்படி என்னதான் இருக்கிறது. அவர்களால் மட்டும் எப்படி இவ்வளவு ஆற்றலை வெளிப்படுத்த முடிகிறது. அவர்களும் நம்மைப் போல் மனிதர்கள்தானே என்று நாம் நினைப்பதுண்டு. அவர்கள் தங்கள் ஆற்றலை மிகவும் அவசியமானவற்றில் மட்டுமே செலவிடுகின்றனர். சில வேலைகளை தினப்படி செய்வதின் மூலம் அவர்களுடைய ஆற்றல் தேவையில்லாதவற்றில் செலவிட நேர்ந்தால் உடனே அதை திட்டமிட்டு சரி செய்கின்றனர். அந்த தேவையில்லாத வேலைகள் திரும்ப நேராதபடி பார்த்துக் கொள்கின்றனர். இதன் மூலம் தேவையானவற்றில் மட்டும் அவர்களுடய கவனம் செல்கின்றது.

இந்த புத்தகத்தில் அப்படிப்பட்ட வழிமுறைகளை தெளிவாகவும், சுலபமாக புரிந்து கொள்ளும் வகையிலும் எழுதி இருக்கிறார் திரு. சிபி கே சாலமன்.

கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடான இந்த புத்தகத்தை வாங்க இங்கே கிளிக்கவும்...

வெண்ணிலா கபடிக்குழு…

Vennila-Kabadi-kuzhu-006

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இடம் பெற்ற இந்த பாடலும் பாடலின் வரிகளும் கேட்பதற்கு இனிமையாகவும்.. மனதை லேசாக்கவும் செய்கிறது... இதோ அந்த பாடல் வரிகள்...கேட்டுப்பாருங்கள் கண்டிப்பாக பிடிக்கும்…

உயிரில் ஏதோ வலிகள் தோன்றும்
என் விழிகள் ஓடி அவள் முகமே தேடும்
பூக்காலம் அருகில் பார்த்தேன்
கார்காலம் பிரிவில் பார்த்தேன்
ஏராளம் நினைவுகள் தீ மூட்டுதே
என்னுள்ளே கனவுகள் போர் மூட்டுதே…


உயிரில் ஏதோ வலிகள் தோன்றும்
என் விழிகள் ஓடி அவள் முகமே தேடும்…

பார்த்துப் பழகிய பொழுதுகள் மனதில் விரியுதே
அதை இன்று எதிரினில் நின்றுதான்
நகர்ந்திட மறுக்குதே
மஞ்சளின் கரைகளாக
என் நெஞ்சிலே கலந்துப்போனால்
வானவில் நிறங்களாக
கண் பார்க்கும் முன் மறைந்துப்போனால்…


காலம் பிரித்தாலும் எந்தன் காதல் பிரியாதே
மேகம் கலைந்தாலும் மீண்டும் தோன்றும் அழியாதே
காலம் பிரித்தாலும் எந்தன் காதல் பிரியாதே
மேகம் கலைந்தாலும் மீண்டும் தோன்றும் அழியாதே

உயிரில் ஏதோ......என் விழிகள் ஓடி அவள் முகமே தேடும்
பூக்காலம் அருகில் பார்த்தேன்
கார்காலம் பிரிவில் பார்த்தேன்
ஏராளம் நினைவுகள் தீ மூட்டுதே
என்னுள்ளே கனவுகள் போர் மூட்டுதே