Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Monday, October 18, 2010

காந்தம்

G262SP

இதயத்தை இரும்பாகத்தான் வைத்திருந்தேன்

யாருக்குத் தெரியும்

அவள் காந்தமாக இருப்பாள் என்று…

Tuesday, October 12, 2010

படித்ததில் பிடித்தது - தனிமை

கண் சிமிட்டும் கணிணி
கை அருகில் பாடல் கருவி
குழுமியிருக்கும் மின் அணு சாதனங்கள்
ஆனாலும் அறை முழுதும் வெறுமை
இதன் பெயர் தான் தனிமை

குளிர்சாதன பெட்டியில்
உணவு வகைகளின் பட்டியல்
சமைக்க செல்லாத மனது
சுவர் ஓரத்தை வெறித்திருக்கும்,இமைக்காத விழி அது
இதன் பெயர் தான் தனிமை

ஆயிரம் நண்பர்கள் இணையத்தில்
மின் அரட்டை ஆரம்பிக்கலாம் நொடியில்
ஓசை கேட்காத பல நூறு குரல்கள்
பார்க்க முடியாத பல நூறு சினேகங்கள்
இதன் பெயர் தான் தனிமை

தலை மேலே அம்மாவின் ஸ்பரிசம்
திரும்பி பார்த்தால் காற்றுதான் முறைக்கும்
மூச்சை முட்டும் அளவு நினைவுகளின் கூட்டம்
ஆனால் கண்களில் மட்டும் கண்ணீர், துடைக்காமல் இருக்கும்
இதன் பெயர் தான் தனிமை

அழ வேண்டும் என்று இனம் புரியா ஆவல்
காரணம் இல்லாததால் அது மனதினுள் காவல்
அயல்நாட்டில் அடைந்திருக்கும் இளைஞர்களின் நிலைமை
தமிழ் என்ற தோழி மட்டும் துணையிருக்கும் கொடுமை
இதன் பெயர் தான் தனிமை

Friday, September 17, 2010

உன் இதழ்கள்…

lips

தனியாக இருக்கும் போது
கவிதையை ரசிக்கிறாய் என்கிறாய்
தனியாக இருப்பதால் தான்
கவிதையை ரசிக்கிறேன்
என்னோடு நீ இருந்தால்
உன் இதழையல்லவா ரசித்திருப்பேன்.

Thursday, September 16, 2010

படித்ததில் பிடித்தது…

ananya7

வட்டியோடு முதலுமாய்
வாரிக்கொண்டு போய்விட்டாயே
குட்டிபோட்ட பூனைபோல்
கூட வருகிறேன்
நானும்...

Tuesday, September 7, 2010

படித்ததில் பிடித்தது…

உன் மெளனத்தில் உள்ள
வார்த்தைகளையும்...
உன் கோபத்தில் உள்ள
அன்பையும்...
யார் உணர முடிகிறதோ
அவர்கள்தான்
உனக்காக படைக்கப்பட்ட
உன்மையான
உறவுகள்...

Friday, July 9, 2010

நண்பரின் கவிதை... - பாகம் 2

2592840035_a3462f2e09

தூசு தட்டிய புத்தகத்தில் கிடைத்த மற்றொரு கவிதை, உங்கள் பார்வைக்காக,

கைக்கெட்டாமல் நீ, காதல்
கரைசேராமல் நான்,
கரையும் கண்களுக்கு, உன்
காதல் தந்த பரிசு,
விழிக்கும் வரையில், என்
விழிகளில் நீ...

Wednesday, July 7, 2010

நண்பரின் கவிதை...

True_Love_Forever2C_Red_Rose

பணி நிமித்தமாக சென்னையில் இருந்து பெங்களூர் மாறியதும், எனக்கு அடைக்கலம் கொடுத்தது இங்கு இருக்கும் என் பள்ளி நண்பர். சென்ற வாரம் நாங்கள் புது வீடு மாறினோம். வீட்டை மாற்றும் போது கிடைத்த ஒரு  நோட்புக்கில் எழுதியிருந்த சிறிய கவிதை.

போகும் வழி எல்லாம் பூவாய் மாற்றினாய்,
என் நெஞ்சிலோ முள்ளாய் குத்தினாய்,
முள் குத்தி குருதி வரவில்லை,
என் நெஞ்சில் காதல் வந்தது.

இந்த கவிதை என் நண்பர் ஒருவர் எழுதியதே. இந்த மாதிரி பழைய நினைவுப் புதையல்கள் நிறைய இருந்தன. எதுவும் சுவாரசியமாக இருந்தால் பகிர்ந்து கொள்கிறேன்.

Tuesday, June 29, 2010

முரண்…

promethean-casket-pic-rex-121919246 

விளம்பரம்,
இறந்த உடலை வைக்க
குளிர்சாதன பெட்டி கிடைக்குமென்று,
தொலைபேசியில்
தொடர்பு கொண்ட போது
கிடைத்த முதல் வார்த்தை
வாழ்க வளமுடன்

Wednesday, July 8, 2009

கவிதை

எங்கோ, எதிலோ படித்து...

sneha290108_1

மயில் தோகை விரித்தால்தான் மழை வருமா ?

என்னவள் கண் இமைத்தாலே போதுமே !!!

iW6EnJIBFwVvXX5k4k

அழகுதான் !!!

அவள் போட்ட கோலத்தை விட

அதை சுற்றி இருந்த அவளின் பாத சுவடுகள்.

Tuesday, April 21, 2009

SMS கவிதை - உண்மையான நட்பு

Friendship

காரணம் இல்லமால் கலைந்து போக

இது கனவு இல்லை

காரணம் சொல்லி பிரிந்து போக

இது காதல் இல்லை

உயிர் உள்ளவரை தொடரும்

உண்மையான நட்பு

Friday, April 17, 2009

மறந்து விடாதே...

        colorswathi1

என்னை மறக்க வேண்டும் என்று

நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும்

என்னைத்தான் நினைக்கிறாய் என்பதை

மறந்து விடாதே...

Sunday, August 24, 2008

நட்பு



வானத்தின் சொந்தங்கள் வின் மீன்கள்
மலரின் சொந்தங்கள் வண்டுகள்...
காற்றின் சொந்தங்கள் தென்றல்...
நட்பின் சொந்தங்கள்
நல்ல நினைவுகள்...!!!

Saturday, August 23, 2008

அவள்...




அவளை நினைத்தேன்...
கவிதையும் வரவில்லை..
தூக்கமும் வரவில்லை...

Tuesday, July 8, 2008

SMS கவிதைகள்



எதாவது புதுசா எழுதலாம்னு யோசிச்சுக்கிடுருந்தப்போ, என்னோட செல் பேசிக்கு வந்த கவிதைகளை மொத்தம்மா தொகுத்து போடலாம்னு தோனுச்சு (சொந்த சரக்கு இல்லன இப்படி எல்லாம் தோணும்னு யாரோ சொல்றது காதுல விழுகுது).

இதோ SMS-ல் சுட்ட கவிதைகள் உங்கள் பார்வைக்கு...

விரும்பும் நெஞ்சம்
அருகில் இருந்தாலென்ன
தொலைவில் இருந்தாலென்ன
தொலையாத நினைவுகள் உள்ளவரை
தொலைவும் மிக அருகில் தான்

கருவறையை விட்டு
கீழே இறங்கி
கல்லறையை நோக்கி
நடந்து செல்லும் தூரம்தான்
வாழ்க்கை

அடி பெண்ணே
குப்பை தொட்டியும்
என்னை காதலித்திருக்கும்
நீ கிழித்துப் போட்ட
என் கவிதைகளை அது படித்திருந்தால்

பிரிந்து செல்பவர்கள்
மனதை புரிந்து கொள்வதில்லை
மனதை புரிந்து கொண்டவர்கள்
பிரிந்து செல்வது இல்லை

Monday, July 7, 2008

காதலியின் நினைவில். . .

பாசம் என்று
நினைத்துதான் பழகினேன்
பிறகுதான் தெரிந்தது - நீ
என் சுவாசம் என்று.




கை சேராமல் நீ
காதல் கரை ஏறாமல் நான்
கரையும் கண்களுக்கு உன்
காதல் தந்த பரிசு,
விழிக்கும் வரையில் என்
விழிகளில் நீ.

மூடநம்பிக்கை




உனது எதிர்கால சாதனையை
உன் கை ரேகையில் தேடாதே
கையில்லா மனிதர்களும்
சாதித்து கொண்டிருக்கிறார்கள்
இவ்வுலகில் !!!

Saturday, July 5, 2008

முதியோர் இல்லம்



இது ஒரு மனித காட்சி சாலை
இங்கே மிருகங்கள் வந்து விட்டு போகின்றன
மனிதர்களை பார்க்க !!!

Monday, June 30, 2008

கவிதைகள் ...



தூறலும் இல்லை மழை சாரலும் இல்லை
ஆனால் நான் மட்டும் நனைந்து போகிறேன் ....
உன் அன்பின் சாரலில்
-------------------------------------------
உன் உள்ளம் நேசிப்பதை
மறந்து விடலாம்
ஆனால் உன்னை நேசித்த
உள்ளத்தை மட்டும்
உன்னால் மறக்க முடியாது
-------------------------------------------
பிரிவு என்பது யாராலும்
மறக்க முடியாத வலி...
நினைவு என்பது யாராலும்
திருட முடியாத பரிசு...
-------------------------------------------
அலைகள் எனது ஆசான்கள்
விழுந்து எழுவதால் அல்ல
ஒவ்வொரு முறை விழும் போதும்
தவறாமல் எழுவதால்
-------------------------------------------

Sunday, June 29, 2008

அம்மா என்றொரு கவிதை



எனக்கு காய்ச்சல்
ஆனால் நெருப்பாய் கொதிக்கும்
அவள் மனசு !!!

Saturday, June 28, 2008

கவிதைகள்

பிரிவை தாங்க முடியவில்லை
தயவு செய்து பேசாதே
உதடுகள்....
-------------------------------------------

தவறு என்று தெரிந்தும்
தவிர்க்க முடியாமல் தவிக்கும்
இதயத்தின் ஆசை
காதல்
-------------------------------------------
பூக்கள் மலர்வது
உதிரதான் என்றால்
மொட்டாகவே இருக்கட்டும்
நமது நட்பு.
-------------------------------------------
என் காதலியின் கொலுசு
சத்தம் கேட்டுப் பிறந்த கவிதைகள்
அவளூடைய மெட்டி சத்தம்
கேட்டு இறந்தன !!!
-------------------------------------------