இதயத்தை இரும்பாகத்தான் வைத்திருந்தேன்
யாருக்குத் தெரியும்
அவள் காந்தமாக இருப்பாள் என்று…
கண் சிமிட்டும் கணிணி
கை அருகில் பாடல் கருவி
குழுமியிருக்கும் மின் அணு சாதனங்கள்
ஆனாலும் அறை முழுதும் வெறுமை
இதன் பெயர் தான் தனிமை
குளிர்சாதன பெட்டியில்
உணவு வகைகளின் பட்டியல்
சமைக்க செல்லாத மனது
சுவர் ஓரத்தை வெறித்திருக்கும்,இமைக்காத விழி அது
இதன் பெயர் தான் தனிமை
ஆயிரம் நண்பர்கள் இணையத்தில்
மின் அரட்டை ஆரம்பிக்கலாம் நொடியில்
ஓசை கேட்காத பல நூறு குரல்கள்
பார்க்க முடியாத பல நூறு சினேகங்கள்
இதன் பெயர் தான் தனிமை
தலை மேலே அம்மாவின் ஸ்பரிசம்
திரும்பி பார்த்தால் காற்றுதான் முறைக்கும்
மூச்சை முட்டும் அளவு நினைவுகளின் கூட்டம்
ஆனால் கண்களில் மட்டும் கண்ணீர், துடைக்காமல் இருக்கும்
இதன் பெயர் தான் தனிமை
அழ வேண்டும் என்று இனம் புரியா ஆவல்
காரணம் இல்லாததால் அது மனதினுள் காவல்
அயல்நாட்டில் அடைந்திருக்கும் இளைஞர்களின் நிலைமை
தமிழ் என்ற தோழி மட்டும் துணையிருக்கும் கொடுமை
இதன் பெயர் தான் தனிமை
தனியாக இருக்கும் போது
கவிதையை ரசிக்கிறாய் என்கிறாய்
தனியாக இருப்பதால் தான்
கவிதையை ரசிக்கிறேன்
என்னோடு நீ இருந்தால்
உன் இதழையல்லவா ரசித்திருப்பேன்.
உன் மெளனத்தில் உள்ள
வார்த்தைகளையும்...
உன் கோபத்தில் உள்ள
அன்பையும்...
யார் உணர முடிகிறதோ
அவர்கள்தான்
உனக்காக படைக்கப்பட்ட
உன்மையான
உறவுகள்...
தூசு தட்டிய புத்தகத்தில் கிடைத்த மற்றொரு கவிதை, உங்கள் பார்வைக்காக,
கைக்கெட்டாமல் நீ, காதல்
கரைசேராமல் நான்,
கரையும் கண்களுக்கு, உன்
காதல் தந்த பரிசு,
விழிக்கும் வரையில், என்
விழிகளில் நீ...
பணி நிமித்தமாக சென்னையில் இருந்து பெங்களூர் மாறியதும், எனக்கு அடைக்கலம் கொடுத்தது இங்கு இருக்கும் என் பள்ளி நண்பர். சென்ற வாரம் நாங்கள் புது வீடு மாறினோம். வீட்டை மாற்றும் போது கிடைத்த ஒரு நோட்புக்கில் எழுதியிருந்த சிறிய கவிதை.
போகும் வழி எல்லாம் பூவாய் மாற்றினாய்,
என் நெஞ்சிலோ முள்ளாய் குத்தினாய்,
முள் குத்தி குருதி வரவில்லை,
என் நெஞ்சில் காதல் வந்தது.
இந்த கவிதை என் நண்பர் ஒருவர் எழுதியதே. இந்த மாதிரி பழைய நினைவுப் புதையல்கள் நிறைய இருந்தன. எதுவும் சுவாரசியமாக இருந்தால் பகிர்ந்து கொள்கிறேன்.
விளம்பரம்,
இறந்த உடலை வைக்க
குளிர்சாதன பெட்டி கிடைக்குமென்று,
தொலைபேசியில்
தொடர்பு கொண்ட போது
கிடைத்த முதல் வார்த்தை
வாழ்க வளமுடன்
எங்கோ, எதிலோ படித்து...
மயில் தோகை விரித்தால்தான் மழை வருமா ?
என்னவள் கண் இமைத்தாலே போதுமே !!!
அழகுதான் !!!
அவள் போட்ட கோலத்தை விட
அதை சுற்றி இருந்த அவளின் பாத சுவடுகள்.
காரணம் இல்லமால் கலைந்து போக
இது கனவு இல்லை
காரணம் சொல்லி பிரிந்து போக
இது காதல் இல்லை
உயிர் உள்ளவரை தொடரும்
உண்மையான நட்பு
என்னை மறக்க வேண்டும் என்று
நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும்
என்னைத்தான் நினைக்கிறாய் என்பதை
மறந்து விடாதே...


பாசம் என்று

